நாளை விநாயகர் சதுர்த்தி: விற்பனைக்கு வந்த மண் பிள்ளையார்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 30, 2022, 10:15 AM IST
  • நாளை விநாயகர் சதுர்த்தி விழா
  • மண் பிள்ளையார் விலை ரூபாய் 40 முதல் 180 ரூபாய் வரை விற்பனை
  • பூ மற்றும் பழங்கள் விற்பனை கூடுதலாக இருக்கும்
நாளை விநாயகர் சதுர்த்தி: விற்பனைக்கு வந்த மண் பிள்ளையார்கள் title=

விநாயகர் சதுர்த்தி விழா 2022: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் சிறிய வடிவிலான மண் பிள்ளையார் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கமாகும். அதன் பிறகு அருகில் உள்ள நீர்நிலைகளில் வீட்டில் உள்ள நபர்கள் கரைப்பது வழக்கம். அல்லது, தங்கள் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெரிய வடிவிலான பிள்ளையார் சிலைகள் கரைக்க கொண்டு செல்லும் போது, அந்த வாகனங்களில் இந்த மண் பிள்ளையார்களையும் சேர்த்து அனுப்பி விடுவார்கள். 

மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்திக்காக 18 அடியில் தங்கப் பிள்ளையார் சிலை! 21 அடியில் தேங்காய் கணபதி

இந்த நிலையில், சென்னையில் உள்ள கோயம்பேடு, புரசைவாக்கம், தியாகராயநகர், மயிலாப்பூர், மூலக்கடை உள்ளிட்ட பிரதான மார்க்கெட் பகுதிகளில் சிறிய வடிவிலான மண் பிள்ளையார் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த சிலைகள் ரூபாய் 40 முதல் 180 ரூபாய் வரை இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த மண் பிள்ளையார் சிலைகள் விற்பனை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை மாலை வரை விறுவிறுப்பாக விற்பனையாகும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் ஒரு சிலர் நேற்றே மண் பிள்ளையார் சிலைகளை வாங்கிச் சென்றதையும் பார்க்க முடிந்தது. இதே போன்று, விநாயகர் சதுர்த்தி விழா வழிபாட்டில் வைக்கப்படும் பிரதான பொருட்களான கரும்பு, விளாம்பழம், கம்பு மற்றும் சோளம் போன்றவை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துள்ளன. மேலும், விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூ மற்றும் பழங்கள் வியாபாரம் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று காலை திடீரென பெய்த மழை காரணமாக விற்பனை மந்தமானதாக பூ மற்றும் பழக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

எனினும், விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோயம்பேடு மார்க்கெட்டில் பூ மற்றும் பழங்கள் விற்பனை கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்திக்காக விதவிதமான அலங்காரங்களில் கலக்கும் பிள்ளையார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News