பிள்ளையார் பிடித்து வைப்பதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள் என்ன தெரியுமா?

சிவ மைந்தன், பார்வதி தனயன், முருகனுக்கு மூத்தவன், கஜமுக கணபதியை வணங்கினால், துன்பங்கள் தொலைந்தோடும், பாதகங்கள் சாதகமாகும். எந்த இடத்தில் இருந்து விநாயகனே என்றால் ஓடோடி வநது வினை தீர்ப்பவர் விநாயகர்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 8, 2021, 05:44 AM IST
  • கஜமுக கணபதியை வணங்கினால், துன்பங்கள் தொலைந்தோடும்
  • பாதகங்கள் சாதகமாகும்
  • எந்த இடத்தில் இருந்து விநாயகனே என்றால் ஓடோடி வநது வினை தீர்ப்பவர் விநாயகர்
பிள்ளையார் பிடித்து வைப்பதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள் என்ன தெரியுமா? title=

புதுடெல்லி: முழு முதற்கடவுளான விக்ன விநாயகரை வணங்கியே அனைத்து காரியங்க்ளையும் தொடங்குவது தொன்று தொட்டு வரும் மரபு. விநாயகப் பெருமான் எளியோருக்கும், எளியர், அடியாருக்கு அடியார்.  எந்தவொரு நல்ல காரியத்தையும் துவங்கும்போது மங்கலமாக நடைபெற வேண்டும் என்பதற்காக, ஒரு கைப்பிடி மஞ்சளை கையால் பிடித்து வைத்தாலும் அங்கே வந்து விடுகிறார் பிள்ளையார்.

விநாயகரை பிடித்து வைப்பதில் ஏதேனும் நியமங்கள் இருக்கிறதா என்று பலருக்கும் கேள்வி உண்டு. விநாயகர் எளியோனுக்கு எளியார் என்பதால் எப்படி பிடித்தாலும், பிள்ளையார் விக்னங்களை தீர்த்து வைப்பார். நாம் பிடிக்கும் பிள்ளையாரில், எந்தவித பிள்ளையார் பிடித்தால், எந்தவித நன்மை என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மஞ்சள் பிள்ளையார்: பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்

குங்கும பிள்ளையார்:  குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளின் கல்வி சிறக்கும்.  

புற்று மண் பிள்ளையார்:  புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.விவசாயம் செழிக்கும்

வெல்லப் பிள்ளையார்: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் கரையும், வளம் கிடைக்கும்

Also Read | வாழ்வின் அனைத்து இன்னல்களையும் போக்கும் சோமவார விரதம்..!!!

உப்புப் பிள்ளையார்:  உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும், எதிரிகளும் நண்பராவார்கள்.   வெள்ளெருக்கம் பிள்ளையார்: வெள்ளை எருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும், செல்வம் அதிகரிக்கும்.

விபூதிப் பிள்ளையார்:  விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

சந்தனப் பிள்ளையார்:  சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.

சாணப் பிள்ளையார்:  சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

Also Read | மகாலட்சுமியின் மனம் குளிர்ந்து செல்வம் கொழிக்க 10 எளிய வழிகளை பின்பற்றலாம்...!!

வாழைப் பழப் பிள்ளையார்:  வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

வெண்ணெய் பிள்ளையார்:  வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.

சர்க்கரைப் பிள்ளையார்:  சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

பசுஞ்சாணப் பிள்ளையார்:  பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்  

Also Read | எந்நாளும் வளமாய் வாழ திருஷ்டி பரிகாரங்கள் பற்றி தெரியுமா? 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News