ரகசிய கருக்கலைப்பு: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! தப்பியோடிய நபர்!

அனிதா உயிரிழந்து 2 தினங்கள் ஆன நிலையில், மருத்துவக்குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் மருத்துவ குழுவினர் கருக்கலைப்பு தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 9, 2022, 08:34 PM IST
  • கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு
  • மருத்துவக்குழுவினர் தீவிர ஆய்வு
  • சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தவர் தப்பியோட்டம்
ரகசிய கருக்கலைப்பு: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! தப்பியோடிய நபர்! title=

பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி அனிதா. 27 வயதாகும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அனிதா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் தம்பதியினர் தங்களுக்கு 3-வது குழந்தை வேண்டாம் என்று நினைத்து கருவை கலைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்ல பயந்துள்ளனர். எதாவது சிக்கல் ஏற்படுமோ என்ற குழப்பத்தில் இருந்துள்ளனர்.

மேலும் படிக்க | சாதி பெயரை கூறி அடித்து துன்புறுத்தல் - ஏக்கத்தோடு வந்த நின்ற பள்ளி மாணவர்கள்..!

இதனையடுத்து கடந்த 5-ம் தேதி கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் மருந்து கடை நடத்தி வரும், கச்சிமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் உதவி கேட்டு சென்றுள்ளனர். அப்போது மருந்து கடையில் வைத்தே அனிதாவிற்கு முருகன் கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளர். அதில் அனிதாவுக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமாகியுள்ளது. அனிதாவுக்கு சுயநினைவு போனதால் பதறிய முருகன் தனது காரில் வேல்முருகன் மற்றும் அனிதாவை ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு அவர்களை சேர்த்துள்ளார்.

Arrest

அதோடு முருகன் காரில் தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அனிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருந்து கடை உரிமையாளர் முருகனை வலைவீசி தேடி வருகின்றனர். முருகன் மருந்து கடை நடத்துவதற்கு உரிய படிப்பு படிக்கவில்லை என்பதும், அவர் இதற்கு முன்னர் ஜவுளிக்கடை நடத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் ‘டி.சி’யில் ‘கை’ வைப்போம் - அன்பில் மகேஷ் எச்சரிக்கை

இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ குழுவினர் கருக்கலைப்பு தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.அதன்படி திட்டக்குடி அடுத்த மங்களூர் பகுதியில் கருக்கலைப்பு செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மருத்துவக்குழுவினர் அங்கு ஆய்வு செய்ய சென்றனர். அப்போது சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த நபர் ஒருவர் அதிகாரிகளை பார்த்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து அங்கு கருக்கலைப்புக்கு வந்திருந்த பெண்ணை மீட்ட மருத்துவ குழுவினர் அக்கடடிடத்தில் இருந்த மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். 

அனிதா உயிரிழந்து 2 தினங்கள் ஆன நிலையில், மருத்துவக்குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல பெண்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News