துப்பாக்கிச்சூடு வழக்கை ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி முறையீடு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது!  

Last Updated : Jun 5, 2018, 11:36 AM IST
துப்பாக்கிச்சூடு வழக்கை ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி முறையீடு!  title=

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர்.  

இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை மறு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணையை ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று துவங்கினார்.  

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி சிபிஐ விசாரணை கேட்ட வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

Trending News