இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி புனேயில் நாளை நடக்கிறது.
இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி புனேயில் நாளை நடக்கிறது. இதையொட்டி இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மும்பையைச் சேர்ந்தவர் கவுரி பிதே(21) கட்டிடக்கலை மாணவி. இவர் கடந்த 16-ம் தேதி தனது நண்பருடன் காரில் செல்லும் போது நடைபாதையில் மோதியதால் அவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். அப்போது கவுரி போதையில் இருந்து உள்ளார். கவுரியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது அங்கு அவர் ரகளையில் ஈடுபட்டு உள்ளார். போலீஸ் அதிகாரிகளை அடித்து உதைத்து உள்ளார். அவர்களின் செல்போன்களை உடைத்துள்ளார். மேலும் கெட்ட வாரத்தைகளால் அனைவரையும் திட்டியுள்ளார்.
நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிக்களை உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது.
முதல் கட்டமாக ஸ்மார்ட் சிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 20 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் முதல் கட்டமாக புனே, ஆமதாபாத், புவனேஸ்வர், ஜபல்பூர், கொச்சி, காக்கிநாடா, ஜெய்ப்பூர்,சென்னை, கோவை உள்ளிட்ட 20 நகரங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டன. ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.