சத்தீஸ்கர் அரசின் (Chhattisgarh government) சுமார் 5 லட்சம் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிலுவைத் தொகையை அதிகரிக்க பூபேஷ் பாகேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதிகரித்த சம்பளம் ஜனவரி 2021 முதல் பொருந்தும் என்று கருதப்படும். சத்தீஸ்கர் நிதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
PF Contribution: தொழிலாளர் நல அமைச்சகத்தின் (Labour Ministry) பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உங்கள் கைக்கு வரும் சம்பளம் (Take Home Salary)அதிகரிக்கலாம், ஆனால் ஓய்வூதியம் குறையக்கூடும்.
கோட் ஆன் வேஜஸ் 2019, அதாவது ஊதிய குறியீடு 2019-ன் கீழ் வரைவு விதிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் டேக் ஹோம் மாத சம்பளம் அடுத்த நிதியாண்டிலிருந்து அதாவது ஏப்ரல் 2021 ல் இருந்து குறைக்கப்படலாம்.
ஊதிய குறியீடு 2019-ன் கீழ் வரைவு விதிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊழியர்களின் கொடுப்பனவு கூறு மொத்த ஊதிய தொகுப்பில் 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று வரைவு விதிகள் குறிப்பிடுகின்றன.
நீங்கள் தனியார் துறையில் (Organized sector) பணிபுரிந்தால், உங்கள் நிறுவனம் PF/ESI ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்திலிருந்து கழித்தால், இந்த திட்டத்தின் பலனைப் பெறுவீர்கள்.
அரசாங்க முடிவில், குரூப் ஏ ஊழியர்களின் சம்பளத்தில் 15 சதவீதமும், குரூப் பி க்கு 10 சதவீதமும், குரூப் சி மற்றும் டி ஊழியர்களின் சம்பளத்தில் ஐந்து சதவீதமும் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நிச்சயமற்ற நிலைகளுக்கு இடையில், ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க பல நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பணமாகவும், ஊதியமாகவும் வழங்கி இந்த கடினமான காலங்களில் தங்கள் ஊழியர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளன.
வடக்கு டெல்லி மாநகராட்சி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று மருத்துவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
சுந்தர் பிச்சை உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகளில் ஒருவர். இந்த ஆண்டு அவரது சம்பளம் 2 மில்லியன் டாலர்களாக (ரூ. 15.26 கோடி) அதிகரிக்கும் என்று ஆல்பாபெட் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.