ஆந்திர பிரதேச மாநில பள்ளி தேர்வுகுழு 11-ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநில கல்வி துறை அமைச்சர் கண்டா சீனிவாச ராவ் அவர்கள் இன்று விசாகப்பட்டினத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். சுமார் 4,78,621 பேர் எழுதிய இந்த தேர்வில் 2,95,891 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 62% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்ச்சி விகிதத்தினை பொருத்தவரை கிருஷ்ணா மாவட்டம் 75% முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தினை கோதாவரி, குண்டூர் மாவட்டங்கள் பகிர்ந்துக்கொண்டன. 


மூன்றாம் இடத்தினை கடப்பா மாவட்டம் பெற்றுள்ளது எனவும் பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மறுதேர்விற்கு விண்ணப்பிக்கலாம் எனவும், வரும் மே 14-ஆம் நாள் இந்த மறுத்தேர்வு நடைப்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வின் முடிவுகளை மாணவர்கள் bieap.gov.in மற்றும் http://www.examresults.net/ap-board-result/inter/ என்ற இணையத்தளங்களில் தெரிந்துக்கொள்ளலாம்.