PM Kisan: அதிகரிக்கும் ஒதுக்கீடு, நன்மைகள்... 19வது தவணை எப்போது கிடைக்கும்?

PM Kisan Samman Nidhi: விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைத் தணிக்கும் பொருட்டு, பிரதமர் கிசான் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன், பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) போன்ற பிற முன்முயற்சிகளும் நிதியுதவியில் ஊக்கத்தைப் பெற்றுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 2, 2025, 05:16 PM IST
  • PM கிசான் திட்டத்தின் சமீபத்திய புதுப்பிப்புகள்.
  • வலுவாகும் விவசாயக் காப்பீடு.
  • பயிர் சேதங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு விரிவான பாதுகாப்பு.
PM Kisan: அதிகரிக்கும் ஒதுக்கீடு, நன்மைகள்... 19வது தவணை எப்போது கிடைக்கும்?

PM Kisan Samman Nidhi: இந்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் விவசாயத்தையும் விவசாயிகளையும் தொடர்ந்து ஆதரித்து வருகின்றது. விவசாயிகளுக்கான நலத்திட்டங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது பிரதமர் கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டமாகும். இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவியின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 19வது தவணை பிப்ரவரி 2025 முதல் வாரத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைத் தணிக்கும் பொருட்டு, பிரதமர் கிசான் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன், பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) போன்ற பிற முன்முயற்சிகளும் நிதியுதவியில் ஊக்கத்தைப் பெற்றுள்ளன. இது விவசாயத் துறையை வலுப்படுத்துவதற்கான அரசின் விரிவான அணுகுமுறையை நிரூபிக்கிறது.

Add Zee News as a Preferred Source

PM Kisan 19th Installment

PM Kisan திட்டத்தின் 19வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். PM கிசான் யோஜனாவின் 19வது தவணை பிப்ரவரி 2025 முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கு முந்தைய தவணை அக்டோபர் 5, 2024 அன்று வெளியிடப்பட்டது. 19வது தவணைக்கான சரியான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்குள் விவசாயிகள் தங்களின் ஆவணங்களைத் தயார் செய்து, திட்டத்தின் தேவைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PM Kisan: விவசாயிகளுக்கு உயிர்நாடி

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் 2018 டிசம்பரில் தொடங்கப்பட்டது. இது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நேரடி வருமான ஆதரவை வழங்குகிறது. இந்த முன்முயற்சியின் கீழ், தகுதியான விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 தொகையை மூன்று சம தவணைகளில் பெறுகிறார்கள். விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், உள்ளீடுகளுக்குப் பணம் செலுத்துவதற்கும், வானிலை மாற்றத்தால் ஏற்படும் நிதிச் சிக்கல்களுக்கும் விவசாயிகளுக்கு நிதி உதவி கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

PM கிசான் திட்டம்: சமீபத்திய புதுப்பிப்புகள்

பிரதமர் கிசான் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான மத்திய அமைச்சரவையின் முடிவு, பணவீக்க அழுத்தங்கள் மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சவால்களை சமாளிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில் உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட ஒதுக்கீடு அதிக விவசாயிகளை திட்டத்தில் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 19வது தவணை விரைவில் வழங்கப்பட உள்ளது. இது விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் நிதி உதவி வழங்கும். இந்த தொடர்ச்சியான ஆதரவு விவசாய வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் பங்களிக்கின்றது.

PM Fasal Bima Yojana (PMFBY): விவசாயக் காப்பீட்டை வலுப்படுத்துதல்

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளின் உடனடி நிதித் தேவைகளை நிவர்த்தி செய்யும் அதே வேளையில், பிரதமர் பசல் பீமா யோஜனா பயிர் இழப்புகளுக்கான காப்பீட்டுத் தொகையை வழங்கி, நீண்டகால பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது. PMFBY -க்கான நிதியுதவியை ரூ.69,515 கோடியாக உயர்த்துவதற்கான சமீபத்திய அமைச்சரவை முடிவு, இயற்கைப் பேரழிவுகள், பூச்சிகள் மற்றும் நோய்கள் போன்ற எதிர்பாராத ஆபத்துகளிலிருந்து விவசாயிகள் நிதி ரீதியாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்கிறது. 

மேலும் படிக்க | மக்களே கவனம்! அதிக வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா? RBI முக்கிய அறிவிப்பு

PMFBY மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் ஆதரவு

விரிவான பாதுகாப்பு: வானிலை மாற்றங்கள் அல்லது பூச்சிகளால் ஏற்படும் மகசூல் இழப்பு உட்பட பல்வேறு ஆபத்துகளிலிருந்து விவசாயிகளுக்கு PMFBY பாதுகாப்பை வழங்குகிறது. இத்திட்டம் விவசாயிகள் தங்கள் நஷ்டத்தை மீட்டெடுக்கவும், பயிர் இழப்புகளால் ஏற்படும் நிதி நெருக்கடிகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.

மானியப் பிரீமியங்கள்: விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகும் வகையில் பிரீமியத்தில் அரசாங்கம் மானியம் வழங்குகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் குறைந்த பிரீமியத்தை செலுத்துகிறார்கள். செலவினங்களின் பெரும்பகுதியை அரசாங்கம் ஈடுசெய்கிறது.

க்ளைம் செட்டில்மென்ட்: இந்தத் திட்டம், க்ளெய்ம்களின் விரைவான மற்றும் வெளிப்படையான தீர்வை உறுதிசெய்கிறது. விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் நிதி உதவி கிடைக்க இது வழிவகை செய்கிறது. இது அவர்களின் இழப்புகளை ஈடுசெய்யவும், அவர்களின் விவசாய நடவடிக்கைகளை தொடரவும் உதவுகிறது.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி மற்றும் பிரதமர் ஃபசல் பீமா யோஜனா ஆகிய இரண்டிற்கும் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான அமைச்சரவையின் முடிவுகள் இந்தியாவின் விவசாயிகளின் நிதி நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பரந்த நோகத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளன. PM Kisan திட்டத்துக்கான ஒதுக்கீடு மிக முக்கியமானது. இதன் மூலம் விவசயிகளின் விவசாயச் செலவுகளைச் சமாளிக்க உதவி கிடைக்கின்றது. விவசாயிகள் சரியான நேரத்தில் வருமான ஆதரவைப் பெறுவதையும், எதிர்பாராத சூழ்நிலைகளிலிருந்து பாதுகாக்கப்படுவதையும் இது உறுதி செய்கிறது. விவசாயிகள் நேரடி வருவாய் பரிமாற்றத்தால் பயனடைவார்கள். விவசாயிகள் பயிர்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் மற்றும் கணிக்க முடியாத வானிலை போன்ற சவால்களை எதிர்கொள்ளும் போது, ​​இந்த நிதி உதவிகள் அவர்களின் வருமானத்தை உறுதிப்படுத்துவதிலும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

PM Kisan, PMFBY: விவசாயிகளுக்கு உதவும் இரு தூண்கள் 

- பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி மற்றும் பிஎம் ஃபசல் பீமா யோஜனா ஆகிய இரண்டும் தனித்துவமான திட்டங்களாக உள்ளன.
- விவசாயிகளின் உடனடித் தேவைகளுக்கு உதவ PM Kisan நேரடி நிதி உதவியை வழங்குகிறது.
- பயிர் சேதத்தால் ஏற்படும் இழப்புகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க PMFBY உதவுகிறது.
- ஒன்றாக, இந்த முயற்சிகள் ஒரு வலுவான நிதி உதவி கட்டமைப்பை அமைக்கின்றன.
- பொருளாதார ரீதியாக நிச்சயமற்ற நிலை ஏற்பட்டாலும், விவசாயிகள் அவற்றை சமாளித்து நம்பிக்கையுடன் விவசாய நடவடிக்கைகளைத் தொடர இவை உதவுகின்றன.

மேலும் படிக்க | மிகப்பெரிய ஓய்வூதிய உயர்வு விரைவில்: 65 வயது முதல் 5%, 10%, 15% கூடுதல் ஓய்வூதியம்... எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News