7வது ஊதியக்கமிஷன், சமீபத்திய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இரு முறை அதிகரிக்கிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த அதிகரிப்பு அமலுக்கு வருகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், அந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாத ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன. பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் விலைவாசியை சமாளிக்க அகவிலைப்படி திருத்தம் ஊழியர்களுக்கு மிக உதவியாக இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 2023 -க்கான அகவிலைப்படி உயர்வு 


ஜூலை 2023 -க்கான அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வு குறித்த அறிவிப்பிற்காக ஊழியர்கள் பல நாட்களாக காத்திருக்கிறார்கள். அகவிலைப்படி உயர்த்தப்பட்டவுடன் ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும் என நம்பப்படுகின்றது. நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ, அல்லது உங்கள் வீட்டில் யாராவது மத்திய பணியாளர்கள் இருந்தாலோ, இன்னும் சில நாட்களில் உங்களுக்கு பல நல்ல செய்திகள் வரவுள்ளன. குறிப்பாக சொல்லவேண்டுமானால், 3 நல்ல செய்திகளை ஊழியர்கள் பெறக்கூடும் அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.


மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் 3 நல்ல செய்திகள்:
- அகவிலைப்படி உயர்வு
- ஃபிட்மெண்ட் ஃபாக்டர் உயர்வு
- 18 மாத டி அரியர் தொகை பற்றிய அறிவிப்பு


அகவிலைப்படி உயர்வு


மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்து மொத்த அகவிலைப்படி 45 சதவிகிதமாக உயரும் என ஒரு சாரார் கூறி வருகிறார்கள். எனினும், ஜனவரி 2023 முதல் ஜூலை 2023 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களை வைத்து பார்க்கும்போது அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்து மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். 


மேலும் படிக்க | யூபிஐ மூலம் பணம் செலுத்துவது தோல்வியடைந்தால் எப்படி திரும்பப்பெறுவது?


அரசு டிஏ -வை 4 சதவிகிதம் உயர்த்தினால் (DA Hike), ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும் என்ற கேள்வி பலருக்கு இருக்கும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.30,000 என்று வைத்துக்கொள்ளலாம். அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால், ஒவ்வொரு மாதமும் அவர் சம்பளத்தில் ரூ.1,200 உயர்த்தப்படும். இது மட்டுமின்றி, ஆண்டுக்கு ரூ.14,400 அதிகரிப்பு இருக்கும். இது ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசாக இருக்கும். இதை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. டிஏ ஹைக் எவ்வளவு இருக்கும் என்பது அரசின் அறிவிப்பு வந்தவுடன் தான் தெளிவாகும்.  


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் உயர்வு


பிட்மென்ட் பாக்டரை (Fitment Factor) அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. அதையும் தற்போது அரசு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.60 மடங்குகளிலிருந்து 3.0 மடங்காக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. ஃபிட்மென்ட் ஃபேக்டர் அமல்படுத்தப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில், அதற்கான காத்திருப்பு தற்போது முடிவுக்கு வரும் என தோன்றுகிறது. 


18 மாத டி அரியர் தொகை பற்றிய அறிவிப்பு


கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி அரியர் தொகையை (DA Arrerars) அளிக்க வேண்டும் என மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவிய போது ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக மோடி அரசாங்கம் ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரையிலான அகவிலைப்படி அரியர் தொகையை முடக்கியது. இதை அளிப்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. எனினும், வரும் தேர்தல்களை கருத்தில் கொண்டு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் அரசு இதை அளிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அந்த வகையில், அகவிலைப்படி அதிகரிப்பு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர், டிஏ அரியர் என மூன்று பரிசுகளை ஊழியர்கள் விரைவில் பெறக்கூடும். 


மேலும் படிக்க | Business Idea: லட்சங்களை அள்ள... ‘முளை விட்ட’ கோதுமை மாவு பிஸினஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ