7வது ஊதியக் குழு: நீங்களோ அல்லது உங்கள் வீட்டில் உள்ள எவரேனும் மத்திய அரசின் ஊழியராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆம், மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் பம்பர் அதிகரிப்பு இருக்கும். இந்த முறை அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பது மே மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளிலிருந்து தெளிவாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏஐசிபிஐ குறியீட்டு எண்களில் பெரிய முன்னேற்றம்


பிப்ரவரிக்குப் பிறகு வேகமாக வளர்ந்து வரும் ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளிலிருந்து, ஜூலை மாதத்தில் டிஏ அதிகரிப்பு குறைந்தது 6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரலுக்குப் பிறகு, மே மாத ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த குறியீடு இம்முறை 1.3 புள்ளிகள் உயர்ந்து 129 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இப்போது ஜூன் மாதத்தின் எண்ணிக்கை மட்டும் வரவேண்டும். ஜூன் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு நல்ல அளவை எட்டினால், டிஏ 6 சதவீதமாக அதிகரிக்கும். 


பிப்ரவரிக்குப் பிறகு ஏஐசிபிஐ குறியீடு கடுமையாக உயர்ந்தது


ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை ஜனவரி 2022 இல் 125.1 ஆக இருந்தது. இது பிப்ரவரியில் 125 ஆகக் குறைந்தது. பிப்ரவரி மாத புள்ளி விவரம் வந்ததையடுத்து மத்திய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த எண்ணிக்கை அவர்களது டிஏ குறித்த கேள்விகளை எழுப்பியது. எனினும் அதற்குப் பிறகு இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து இப்போது மே மாதத்தில் 129 புள்ளிகளை எட்டியுள்ளது. இதனால் அகவிலைப்படியில் உறுதியான அதிகரிப்பு ஏற்படும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. 


ஏஐசிபிஐ குறியீடு எப்படி உயர்ந்தது?


முன்னதாக, பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் 1 புள்ளி அதிகரித்து ஏஐசிபிஐ குறியீடு 126 புள்ளிகளை எட்டியிருந்தது. இதன்பின், ஏப்ரலில் 1.7 புள்ளிகள் அதிகரித்து, 127.7 ஆக அதிகரித்தது. அதேபோன்று தற்போது மே மாதத்தில் மீண்டும் 1.3 புள்ளிகள் அதிகரித்து இந்த எண்ணிக்கை 129 ஆக உள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் இது 130-ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், டிஏ 6 சதவீதம் அதிகரிப்பது உறுதி.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம், டிஏ, இபிஎஃப், கிராஜுவிட்டி அனைத்திலும் பம்பர் ஏற்றம்


அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்


டிஏவில் 6 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது 40 சதவீதமாக உயரும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. டிஏ 40 சதவீதமாக உயர்ந்தால், சம்பளத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் இருக்கும். 6 சதவீத டிஏ உடன் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அடிப்படை சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்று பார்ப்போம்.


குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (40%) - ரூ.7,200/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 7200-6120 = ரூ.1080/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 1080 X12 = ரூ 12,960


அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (40%) - ரூ.22,760/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 22,760-19,346 = ரூ 3,414/மாதம் 
5. ஆண்டு ஊதிய உயர்வு - 3,414 X12 = ரூ 40,968


இந்த புள்ளிவிவரங்களை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது


மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடப்படுகிறது. அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) புள்ளிவிவரங்கள் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 88 மையங்களுக்கும், நாடு முழுவதற்குமான குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் ஏஐசிபிஐ வெளியிடப்படுகிறது. சமீபத்திய தரவு ஜூன் 30 அன்று வெளியிடப்பட்டது.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ-வில் பம்பர் ஏற்றம், ரூ. 40,000 வரை சம்பளம் அதிகரிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR