7வது ஊதியக்கமிஷன் சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. விரைவில் அகவிலைப்படியில் மீண்டும் ஒரு பெரிய அதிகரிப்பு இருக்கக்கூடும். பணவீக்க புள்ளிவிவரங்களிலிருந்து இந்த அறிகுறி கிடைத்துள்ளது. ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்களில் மிகப்பெரிய வளர்ச்சி காணப்படுகிறது. இதன் மூலம், 2023 ஆம் ஆண்டில் பணியாளர்கள் புதிய பரிசைப் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படியின் அடுத்த அதிகரிப்பு ஜனவரி 2023 இல் இருக்கும். தொழில்துறை தொழிலாளர்களுக்கான பணவீக்க புள்ளிவிவரங்கள், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று சுட்டிக்காட்டுகின்றன. தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது அகவிலைப்படியில் நல்ல உயர்வு இருக்கும் என்று தெரிகிறது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி (டிஏ) 42 சதவீதத்தை எட்டும்


மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு அகவிலைப்படி வடிவத்தில் பெரிய பரிசு கிடைக்கக்கூடும். இது ஜனவரி 2023 முதல் அமலுக்கு வரும். ஆனால், இது மார்ச் 2023 இல் ஹோலி பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்படும்.  அகவிலைப்படி 4 சதவீதம் உயர்ந்தால், மொத்த அகவிலைப்படி 42 சதவீதத்தை எட்டும். குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் மாதம் 720 ரூபாய் மொத்தமாக உயர்த்தப்படும். அதேசமயம், அதிகபட்ச சம்பள வரம்பிற்கு, மாதம் ரூ.2276 உயர்வு இருக்கும். 


தொழிலாளர் அமைச்சகம், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்-தொழில்துறை தொழிலாளர்களின் (ஏஐசிபிஐ) புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை செப்டம்பரில் 131.2 ஆக இருந்தது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் 2022 வரை ஏஐசிபிஐ குறியீட்டில் மொத்தம் 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 1.1 சதவீதம் அதிகமாகும்.


2022 இன் இரண்டாம் பாதியில் இருந்து அகவிலைப்படி சேரும்


இரண்டாம் அறையாண்டின் AICPI குறியீட்டின் எண்கள் மூலம் 2023 ஜனவரியில் எவ்வளவு அகவிலைப்படி அதிகரிக்கும் என்பது தீர்மானமாகும். டிசம்பர் 2022 வரையிலான தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு இருக்கும். செப்டம்பர் வரையிலான புள்ளிவிவரங்கள் வந்துள்ளன. அகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் திருத்தப்படுகிறது. முதலாவது ஜனவரியிலிருந்தும், இரண்டாவது ஜூலையிலிருந்தும் பொருந்தும். ஜனவரி 2023 இல் அதிகரிப்பு டிசம்பர் வரையிலான புள்ளிவிவரங்களின்படி இருக்கும். இது மார்ச் 2023 இல் ஹோலியை ஒட்டி அறிவிக்கப்படும். தற்போது ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதம் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | 8th Pay Commission அமலுக்கு வருகிறதா? முக்கிய அப்டேட் இதோ 


ஊழியர்களின் சம்பளத்தில் எவ்வளவு வித்தியாசம் இருக்கும்?


குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்று கணக்கிட்டால்:


1. ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (42%) - ரூ.7560/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (38%) - ரூ.6840/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு 7560-6840 = ரூ 720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 720X12 = ரூ 8640


அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56900-ல் கணக்கீடு:


1. ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (42%) - ரூ.23,898/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (38%) - ரூ.21,622/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு 32898-21622 = ரூ 2,276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2,276X12=  ரூ. 27,312


குறிப்பு: இது மதிப்பிடப்பட்ட ஊதியமாகும். எஹ்ஆர்ஏ போன்ற அலவன்ஸ்களைச் சேர்த்த பின்னரே இறுதிச் சம்பளம் வழங்கப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், உயர்ந்தது டிஏ, இரு தவணைகளில் அரியர் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ