7th Pay Commission: ஊழியர்களுக்கு முக்கிய செய்தி, GPF விதிகளில் மாற்றம்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி வந்துள்ளது. ஊழியர்களின் ஓய்வூதிய நிதி தொடர்பான விதியில் அரசு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 5, 2022, 10:50 AM IST
  • ஓய்வூதிய நிதி தொடர்பான விதியில் பெரிய மாற்றம்.
  • அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பொது வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யலாம்.
  • ஓய்வூதியத்தின் போது இந்த பணம் கணக்கு வைத்திருப்பவருக்குத் திருப்பித் தரப்படும்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு முக்கிய செய்தி, GPF விதிகளில் மாற்றம் title=

7வது ஊதியக்குழு பொது வருங்கால வைப்பு நிதி பற்றிய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி வந்துள்ளது. ஊழியர்களின் ஓய்வூதிய நிதி தொடர்பான விதியில் அரசு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. DoPPW-ன் அலுவலக குறிப்பாணையின் படி, பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜெனெரல் பிராவிடண்ட் ஃபண்ட்) விதிகளில் அரசாங்கம் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் இந்த மாற்றத்தை பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். புதிய விதிகளின் கீழ், இப்போது GPF இல் முதலீட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 லட்சமாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) முதலீட்டில் உச்ச வரம்புகளை மத்திய அரசு விதித்துள்ளது. புதிய விதியின்படி, இனி எந்த ஒரு அரசு ஊழியரும் ஜிபிஎஃப்-ல் ரூ.5 லட்சம் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இந்த வரம்பு ஒரு நிதியாண்டுக்கு இருக்கும். அரசாங்கத் துறை ஊழியர்கள் GPF இல் முதலீடு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வகையான தன்னார்வத் திட்டமாகும். இது பிபிஎஃப் போன்றது. இதில், முதலீட்டுக்கு 7.1 சதவீதம் வட்டி கிடைக்கும்.

இதுவரை இதற்கு வரம்பு இல்லாமல் இருந்தது

ஜிபிஎஃப் விதிகள் 1960ன் கீழ், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையின் (DoPPW) அலுவலக குறிப்பாணையின்படி, கணக்கு வைத்திருப்பவரின் ஜிபிஎஃப் பங்களிப்பு மொத்த சம்பளத்தில் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது. இதுவரை ஜிபிஎஃப்-ல் பணம் போடுவதற்கு வரம்பு இல்லாமல் இருந்தது. ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு சதவீதத்தை அதில் டெபாசிட் செய்யலாம் என இருந்தது. ஆனால், தற்போது ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் என்ற வரம்பை அரசு விதித்துள்ளது.

மேலும் படிக்க | எச்சரிக்கை: அரசு ஊழியர்களுக்கு அபராதங்கள் விதிக்க வாய்ப்பு! 

பிபிஎஃப் போல அரசு ஊழியர்களுக்கு ஜிபிஎஃப் 

பிபிஎஃப் போல, அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பொது வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யலாம். ஓய்வூதியத்தின் போது இந்த பணம் கணக்கு வைத்திருப்பவருக்குத் திருப்பித் தரப்படும். GPF இல் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு வட்டி கிடைக்கும். இது ஓய்வூதியம் பெறுவோர் நலன், பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

ஜிபிஎஃப் என்றால் என்ன?

பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) கணக்கு அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஆனது. இது ஒரு வகையான ஓய்வூதிய நிதி திட்டமாகும். அரசு ஊழியர்கள் தங்களது சம்பளத்தில் 15 சதவீதம் வரை ஜிபிஎஃப் கணக்கில் செலுத்தலாம். இந்தக் கணக்கின் 'அட்வான்ஸ்' அம்சம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

இதில், பணியாளர் தேவைப்பட்டால் ஜிபிஎஃப் கணக்கிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட தொகையை எடுக்கலாம். பின்னர் அதை மீண்டும் டெபாசிட் செய்யலாம். இதற்கு வரி கிடையாது. ஜிபிஎஃப்- இன் வட்டி விகிதத்தை அரசாங்கம் 7.1 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. வட்டி காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அரசாங்கம் அதன் சார்பாக ஜிபிஎஃப்- க்கு எந்த பங்களிப்பும் செய்யாது, ஊழியர் பங்களிப்பு மட்டுமே இதில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி அரியர் தொகை எப்போது கிடைக்கும்? முக்கிய அப்டேட்!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News