8வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்புப்பு: சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரண உயர்வு பற்றிய அறிவிப்பை அரசு வெளியிட்டது. இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கான நல்ல செய்திகள் இதனுடன் முடிந்துவிடவில்லை. வரும் மாதங்களில் அரசு இன்னும் பல செய்திகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் முக்கியமானது 8வது ஊதியக்கமிஷன் ஆகும். பொதுத்தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு என்ற பெரிய பரிசை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பணியாளர்கள் பெரிய அளவில் பயனடைவார்கள். 2016ஆம் ஆண்டு ஏழாவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டது. தற்போது அடுத்த ஊதியக் குழு 2026ஆம் ஆண்டில் அமைக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கும்


பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு அமல்படுத்தி வரும் ஊதியக் குழுவில், ஊழியர்களின் (Central Government Employees) அடிப்படை சம்பளம் பெருமளவில் உயர்த்தப்படுகிறது. பத்தாண்டுகள் என்ற கணக்கில் 2026 அம் ஆண்டு அடுத்த ஊதியக்கமிஷன், அதாவது 8வது ஊதியக்கமிஷன் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் அனைத்து ஊழியர்களும் பெரிய வகையில் பயனடைவார்கள். ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக ஊழியர்கள் தரப்பிலிருந்து இருந்து வருகிறது. இதற்கு இப்போது அரசாங்கம் செவி சாய்க்கலாம் என கூறப்படுகின்றது. அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57 மடங்கிலிருந்து நேரடியாக 3.0 மடங்கு உயர்த்தலாம் என கூறப்படுகின்றது. எனினும் 8வது ஊதியக் குழுவில் ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) 3.68 மடங்காக உயரக்கூடும். அதாவது ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 44.44 சதவீதம் அதிகரிக்கலாம். 7வது ஊதியக் குழுவின் கீழ், ஊழியர்கள் 2.57 (ஃபிட்மென்ட் பேக்டர்) அடிப்படையில் அடிப்படை சம்பளமாக ரூ.18 ஆயிரம் பெறுகின்றனர். இது 26 ஆயிரம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கலாம்.


மேலும் படிக்க | இந்தியாவில் E-Air Taxi சேவை... பயண நேரம் வெறும் 7 நிமிடங்கள்..!


அகவிலைப்படி அதிகரிப்பு


கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 4 சதவிகிதம் அதிகரித்தது. இதன் பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) 46 -ஐ எட்டியுள்ளது. இதன் காரணமாக அடிப்படை சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். ஏழாவது ஊதியக் குழுவின் படி, ஊழியர்களின் டிஏ ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. 


50% அகவிலைப்படி


அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே 8வது ஊதியக்குழு (8th Pay Commission) பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் ஒரு சாரார் கூறி வருகிறார்கள். இதற்கான காரணம் அகவிலைப்படியுடன் தொடர்புடையது. ஏழாவது ஊதியக்குழு விதிகளின் படி, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது, ​​அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். இதற்குப் பிறகு, அப்போதுள்ள அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத டிஏ சேர்க்கப்பட்டு, அகவிலைப்படி கணக்கீடு பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும். ஜூலை 2023-க்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு, மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஜனவரி 2023 -இலும் அகவிலைபப்டி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும். அந்த நிலையில், ஊதிய திருத்தம் செய்யப்பட வேண்டும். ஊதிய திருத்தம் செய்ய வேண்டுமானால், புதிய ஊதிய குழு அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். மேலும் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்களும் வரவுள்ள நிலையில், அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


மேலும் படிக்க | வாங்கின தேதியில் இருந்து வாரண்டி கிடையாதாம்...பதறாதீங்க... முதல்ல இதை படிங்க..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ