Fixed Deposit vs Bonds: நாம் அனைவரும் பணத்தை சேமித்து வைக்க, முதலீடு செய்து பெருக்க விரும்புகிறோம். இதற்கு நம்மிடம் பல முதலீட்டு திட்டங்களும் உள்ளன. எனினும், எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும், எதில் ஆபத்து குறைவு என முதலீடு தொடர்பான பல கேள்விகள் நமக்கு இருப்பதுண்டு. இது முற்றிலும் முதலீடு செய்யும் நபரை பொறுத்தது என்கிறார்கள் நிபுணர்கள். சிலர் முதலீடுகளில் அதிக ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பார்கள். சிலரோ வருமானம் குறைவாக இருந்தாலும் சரி, அதிக ரிஸ்க் தேவை இல்லை என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். நம்மால் சமாளிக்கக்கூடிய ரிஸ்க் காரணியுடன் நல்ல வருமானத்தைப் பெற முதலீட்டு போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துவது அவசியமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று பலர் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள். அவை நடுத்தர முதல் அதிக ஆபத்துள்ள முதலீட்டு விருப்பங்களாக கருதப்படுகின்றன. ஓரளவு வருமானம் மற்றும் பாதுகாப்புக்காக முதலீட்டாளர்கள் பெரும்பாலும் நிலையான வைப்புத்தொகைகள் (FD) மற்றும் பத்திரங்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்புகிறார்கள். 


நிலையான வைப்பு என்றால் என்ன?


நிலையான வைப்புத்தொகை என்பது வங்கிகளால் வழங்கப்படும் நிதிக் கருவியாகும். இது முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்ட முதிர்வு தேதி (maturity date) வரை வழக்கமான சேமிப்புக் கணக்கை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.


முதலீட்டாளர்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட வட்டி விகிதத்தில் ஒரு நிலையான காலத்திற்கு தங்கள் வங்கியில் ஒரு மொத்த தொகையை டெபசிட் செய்கின்றனர். திட்டகாலத்தின் முடிவில், அவர்கள் முதலீடு செய்த தொகையையும் கூட்டு வட்டியையும் பெறுகிறார்கள். 


மேலும் படிக்க | இந்தத் தேதிக்குள் ஆதாரை இணைக்கத் தவறினால் பான் கார்டு செயல்படாது! 


பத்திரங்கள் (பாண்ட்ஸ்) என்றால் என்ன?


ஒரு பத்திரம் என்பது ஒரு நிலையான வருமான கருவியாகும். இது ஒரு முதலீட்டாளர் கடன் வாங்குபவருக்கு (பொதுவாக கார்ப்பரேட் அல்லது அரசு) கொடுத்த கடனைக் குறிக்கிறது. பாண்ட் என்பது, கடனளிப்பவருக்கும் கடன் வாங்குபவருக்கும் இடையே கடன் மற்றும் அதன் செலுத்துதல்கள் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய ‘நான் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்’ ( ‘I owe you' or I.O.U) (கடன் இருப்பதை ஒப்புக்கொள்ளும் ஆவணம்) என ஒரு பத்திரமாக கருதப்படலாம்.


திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு நிதியளிக்க நிறுவனங்கள், நகராட்சிகள், மாநிலங்கள் மற்றும் சோவரின் பத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கார்ப்பரேட் அல்லது அரசாங்கப் பத்திரங்களின் கடன் தகுதியின் பிரதிநிதித்துவமாக பத்திரங்கள் மதிப்பிடப்படுகின்றன. மதிப்பீடுகள் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகளால் வெளியிடப்படுகின்றன. மேலும் பத்திரம் வழங்குபவரின் நிதி வலிமை மற்றும் ஒப்பந்தத்தின்படி பத்திரத்தின் அசல் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றின் மதிப்பீடுகளை வழங்குகிறது. அவை AAA முதல் D வரை மதிப்பிடப்படுகின்றன, AAA சிறந்த மதிப்பீடாகும்.


நிபுணரின் பார்வை


FD-களுடன் ஒப்பிடும்போது பத்திரங்கள் எவ்வளவு பாதுகாப்பானவை?


இன்வெஸ்டோகிராபி பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஸ்வேதா ஜெயின் கருத்துப்படி, பத்திர பாதுகாப்பு பத்திரங்களை வழங்கிய நிறுவனத்தைப் பொறுத்தது. "பத்திரத்தை வழங்கும் நிறுவனம் AAA மதிப்பீட்டில் இருந்தால், (எந்தவொரு முக்கிய கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களாலும் வழங்குபவரின் பத்திரங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மதிப்பீடு) அது மிகவும் பாதுகாப்பானது. ஆனால் அது AA என மதிப்பிடப்பட்டிருந்தால், அவ்வளவு பாதுகாப்பு இருக்காது. மேலும், ஒரு நிறுவனம் வழங்கிய பத்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டாளர் நிறுவனம் திருப்பிச் செலுத்தும் என்ற நம்பிக்கையின் அபாயத்தை எடுத்துக்கொள்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு FD இல், 5 லட்சம் வரை காப்பீடு செய்யப்படுகிறது, இது பத்திரங்களில் இல்லை,” என்று அவர் கூறினார். 


சிறந்த முதலீட்டு விருப்பம் எது?


FD மற்றும் பத்திரங்கள் இரண்டிலும் அவற்றுக்கான நன்மை தீமைகள் உள்ளன. எனினும், இதில் எது சிறந்தது என்பது முதலீட்டாளர்களின் தேவைகளைப் பொறுத்தது.


"இது தேவையைப் பொறுத்தது. தேவை பாதுகாப்பு என்றால், FD நிச்சயமாக சிறந்தது. ஆனால் முதலீட்டின் மீதான அதிக வருமானம் தேவை என்றால், கூடுதல் வருமானத்துக்காக ரிஸ்க் எடுக்க தயாரக இருந்தால், பாண்டுகள் சிறந்தவையாக பார்க்கப்படுகின்றன" என்றார் ஸ்வேதா.


மேலும் படிக்க | உங்கள் ஊதியத்தில் வீட்டுக் கடன் கிடைக்கவில்லையா? Joint Home Loan தீர்வாக அமையும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR