உங்கள் ஊதியத்தில் வீட்டுக் கடன் கிடைக்கவில்லையா? Joint Home Loan தீர்வாக அமையும்

Home Loan: பலர் தங்கள் வீட்டுக் கனவை நனவாக்க வீட்டுக் கடனைப் பெறுகிறார்கள். பல நேரங்களில் மக்கள் தங்கள் சம்பளத்தில் வீட்டுக்கடன் பெற முடியாத நிலையும் ஏற்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 20, 2022, 06:13 PM IST
  • கூட்டு வீட்டுக் கடனில் பல நன்மைகள் உள்ளன.
  • இணை விண்ணப்பதாரருக்கு (Co-Applicant) யார் விண்ணப்பிக்கலாம்?
  • எந்த நிபந்தனைகளில் கடன் வழங்கப்படும்?
உங்கள் ஊதியத்தில் வீட்டுக் கடன் கிடைக்கவில்லையா? Joint Home Loan தீர்வாக அமையும் title=

ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் பணவீக்கம் அதிகமாக இருக்கும் இன்றைய சகாப்தத்தில், சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவது அனைவரது நிதி நிலையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். பலர் தங்கள் வீட்டுக் கனவை நனவாக்க வீட்டுக் கடனைப் பெறுகிறார்கள். பல நேரங்களில் மக்கள் தங்கள் சம்பளத்தில் வீட்டுக்கடன் பெற முடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்த சிக்கலை தவிர்க்க, இப்போதெல்லாம் வங்கிகள் கூட்டு அதாவது ஜாயிண்ட் வீட்டுக்கடன்களை வழங்குகின்றன. பெயர் குறிப்பிடுவது போல, கூட்டு வீட்டுக் கடன் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் கூட்டு வங்கிக் கணக்கைக் குறிக்கிறது. 

நீங்கள் உங்கள் மனைவி அல்லது உங்களது நெருங்கிய உறவினர்கள் எவருடனும் சேர்ந்து கூட்டு வீட்டுக் கடனைப் பெறலாம். கூட்டு வீட்டுக் கடனில் பல நன்மைகள் உள்ளன. இந்தக் கடனுக்கு விண்ணப்பிப்பது உங்கள் வீட்டுக் கடனைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. கூட்டு வீட்டுக் கடனின் சிறந்த நன்மை என்னவென்றால், இந்தக் கடனின் முழுச் சுமையும் ஒரு நபர் மீது விழுவதில்லை.

இணை விண்ணப்பதாரருக்கு (Co-Applicant) யார் விண்ணப்பிக்கலாம்

ஜாயிண்ட் ஹோம் லோன் பெற, இணை விண்ணப்பதாரராக தனியாக ஊதியம் பெறும் நபரைச் சேர்ப்பது நன்மை பயக்கும். இதற்கு, உங்கள் நெருங்கிய உறவினரை இணை விண்ணப்பதாரராக சேர்க்கலாம். இந்த உறவினர்களில் பெற்றோர், கணவன் மற்றும் மனைவி, சகோதர சகோதரிகள், மகன்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் இருக்கலாம்.

எந்த நிபந்தனைகளில் கடன் வழங்கப்படும்

கூட்டு வீட்டுக் கடனுக்கு, இணை விண்ணப்பதாரர் வேலையில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு மற்றும் அதிகபட்சம் ஆறு நபர்களுடன் கூட்டு வீட்டுக் கடனை நீங்கள் பெறலாம். ஒரு விண்ணப்பதாரரின் சம்பளம் அதிகமாக இருந்தால், அவரை சொத்தில் முக்கிய பங்குதாரராக ஆக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் மூலம், வருமான வரி விலக்கின் பெரும் பலனைப் பெறுவீர்கள். ஸ்டாம்ப் டியூட்டி மற்றும் பதிவுக் கட்டணங்களிலும் வருமான வரி விலக்கு பெறலாம்.

மேலும் படிக்க | வீடு வாங்கும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள் 

வீட்டுக் கடனின் நன்மைகள் என்ன

கூட்டாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் வரியைச் சேமிக்கலாம். கூட்டு வீட்டுக் கடனில் வருமான வரி 80C பிரிவின் கீழ், இரு உரிமையாளர்களும் வரியைச் சேமிக்கலாம். இதற்கு இருவரும் இணை உரிமையாளர்களாக இருப்பது அவசியம். அப்போதுதான் இருவருக்குமே வட்டியில் ரூ.2 லட்சமும், அசலுக்கு ரூ.5 லட்சமும் பலன் கிடைக்கும்.

கூட்டு வீட்டுக் கடனில், கடனைத் திருப்பிச் செலுத்தும் முழுச் சுமையும் எந்த ஒரு நபரின் மீதும் வராது. எதோ ஒரு காரணத்தினால் ஒரு விண்ணப்பதாரரால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால், இணை விண்ணப்பதாரர் கடனைத் திருப்பிச் செலுத்தலாம்.

மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்க போகிறீர்களா? அப்போ இது உங்களுக்குத்தான்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News