தக்காளி மொத்த விற்பனை விலை குறைவு: பருவமழை பெய்து வரும் காரணத்தால், கடந்த 20 நாட்களாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துக் கொண்டே வருகிறது. ஆனால், தற்போது டெல்லியில் மத்திய அரசின் முயற்சியால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சில மையங்களில் தக்காளி கிலோ ரூ.90க்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தை பற்றி பேசுகையில், தொடர்ந்து உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இறக்குமதி அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்தது. டெல்லி-என்சிஆர், தமிழகத்தை தவிர, இப்போது உ.பி., ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய சில நகரங்களில் மொபைல் வேன்கள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், சனிக்கிழமையன்று வட இந்திய மக்களுக்கு பணவீக்கத்தில் இருந்து சிறிது நிவாரணம் கிடைத்துள்ளது. உண்மையில், தக்காளியின் மொத்த விலையில் சுமார் 29 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தக்காளியின் மொத்த விலையில் 29% சரிவு
நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தக்காளியின் மொத்த விலை இன்று குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.10750ல் இருந்து ரூ.7575 ஆக குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை சற்று குறைந்து மொத்த விலையில் 29% சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு பதிவானது கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பீகார், வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தக்காளி விற்பனையை நாஃபெட் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 7 லட்சம் அரசு ஊழியர்கள் ஹேப்பி... அரியர் உடன் அகவிலைப்படி உயர்த்திய மாநில அரசு!


இதனிடையே நாஃபெட் (NAFED) நிறுவனம் தக்காளியை மக்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. தக்காளி மொத்த விற்பனை விலையில் சனிக்கிழமை 29 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. மறுபுறம், என்சிசிஎஃப் வெள்ளிக்கிழமை முதல் டெல்லி-என்சிஆரில் தக்காளியை ரூபாய் 90/கிலோவுக்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.


இந்த நிலையில் புதிய பயிர்கள் விரைவில் வருவதாலும், வானிலை சீராக உள்ளதாலும், விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ஞாயிற்றுக்கிழமைக்குள், உ.பி., ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியின் சில பகுதிகளில் அரசு விலையில் தக்காளி கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை முதல், டெல்லியில் சுமார் 100 மையங்களில் NCCF மலிவான தக்காளியை விற்பனை செய்கிறது. என்சிசிஎஃப் தலைவர் கூறுகையில், விலை சீராகும் வரை மானிய விலையில் தக்காளி விற்பனை தொடரும். இருப்பினும், தக்காளி கிலோ ரூ.90க்கு கிடைக்காதவர்கள், தக்காளி எப்போது மீண்டும் பழைய விலைக்குத் திரும்பும். மொத்த விற்பனை விலையில் குறைப்பு சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது, அதன் விளைவைக் காண சிறிது நேரம் ஆகலாம்.


கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.110க்கு விற்பனை
இதற்கிடையில் கோயம்பேடு, காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைவால் தற்போது விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு அதிமாக விற்று வருகின்றனர்.


மேலும் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு ரேசன் கடை மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையை தொடங்கி உள்ளது என்பது குறிப்படத்தக்கது.


மேலும் படிக்க | Indian Railways அட்டகாசமான செய்தி: ஜெனரல் டிக்கெட் விதிகளில் மாற்றம்.. குஷியில் பயணிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ