Budget 2024: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இது தொடர்பாக பல துறைகளை சேர்ந்த மக்களுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. பல அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளையும் நிதி அமைச்சரிடம் (Finance Minister) அளித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடுத்தர வர்க்கம்


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) இம்முறை, ஏழைக் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதுமட்டுமின்றி, இம்முறை பட்ஜெட்டில், வரிவிலக்கு தொடர்பாக, நிதியமைச்சர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் நம்பப்படுகிறது. பட்ஜெட்டில் தனிநபர்களுக்கான வருமான வரம்பை தற்போதைய ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அரசு அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பழைய வரி முறையின் (Old Tax Regime) கீழ் வரி அடுக்கு விகிதங்களிலும் மாற்றம் செய்யபப்டலாம். 


வரி விலக்கில் நிவாரணம்


இந்த முறை பட்ஜெட் 2024 இல், வருமான வரியின் பிரிவு 80C இன் கீழ் விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் (Middle Class) முதலீடு செய்ய மேலும் அதிக ஊக்கம் கிடைக்கும். 2024 பட்ஜெட்டில் வரிக் குறைப்புகளைக் கொண்டு வருவதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்களின் நுகர்வு அதிகரிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அதன் நோக்கம் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரித்து, அதன் மூலம் நுகர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதாகும்.


மேலும் படிக்க | நாளைக்குள் இந்த வேலையை முடிச்சுடுங்க! இறுதி வார்னிங் கொடுக்கும் பஞ்சப் நேஷனல் பேங்க்!


இவர்களுக்கு பலன் கிடைக்கும்


அரசு எடுத்து வரும் வரி விலக்கு (Tax Exemption) நடவடிக்கைகளால் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை உள்ளவர்கள் பயனடைவார்கள். இருப்பினும், இந்த வரி விலக்கு அனைத்து வரி செலுத்துவோருக்கும் பொருந்தாது. புதிய வரி விதிப்பு முறையில் (New Tax Regime) தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். ஏனெனில், புதிய வரி விதிப்பு முறையிலேயே அடிப்படை வரி விலக்கை அதிகரிக்க அரசு பரிசீலித்து வருகிறது. எனினும், இது தொடர்பில் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருகிறது. பட்ஜெட்டின் தாக்கல் செய்யப்படும்போது இறுதி முடிவு எடுக்கப்படும்.


வரி அடுக்குகளிலும் மாற்றங்கள் இருக்கலாம்


மத்திய பட்ஜெட் 2023 இல், நிதியமைச்சர் சீதாராமன் புதிய வரி முறையை இயல்புநிலை, அதாவது டீஃபால்ட் வரி அமைப்பாக மாற்றினார். இது ஆரம்பத்தில் பட்ஜெட் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வரி செலுத்துவோர் பழைய வரி முறையைத் தேர்வுசெய்ய அனுமதித்தது. இது விலக்குகளுடன் ஏற்றப்பட்டது. தொழில்துறையினரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு புதிய வரி விதிப்பின் கீழ் மோடி அரசு மிக உயர்ந்த தனிநபர் வருமான வரி ஸ்லாப் விகிதத்தை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான நுகர்வை ஊக்குவிக்க வேண்டிய தேவை இருப்பதால், அதிக வருமான வரி அடுக்குகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது.


மேலும் படிக்க | Bank Holidays in July: ஜூலையில் இத்தனை நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. நோட் பண்ணுங்க மக்களே!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ