புதுடெல்லி: வீட்டு விலை உயர்வு மற்றும் வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்திருப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில் மக்கள் வீடு வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் அடுத்த ஆண்டு ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால் நிலைமை சீரடையலாம். ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ஜேஎல்எல் இந்தியா (JLL India) இது தொடர்பாக வெளிய்ட்ட ஒரு அறிக்கையில் இந்த மதிப்பீட்டை வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த ஆண்டு ரெப்போ ரேட் குறைக்கப்பட்டால், வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீடுகளின் விற்பனை மேலும் அதிகரிக்கும். வட்டி விகிதங்கள் உயர்ந்தாலும், இரண்டு ஆண்டுகளில் வீட்டு விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இருப்பினும், குடியிருப்பு சொத்துக்களின் விலை உயர்வு மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்திருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வீட்டு விற்பனை அதிகரித்துள்ளது. கன்சல்டன்சி நிறுவனம் அதன் ‘வீட்டு வாங்கும் மலிவு குறியீட்டை’ (HPAI) வெளியிட்டது. சராசரி ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பம் (ஒட்டுமொத்த நகர மட்டத்தில்) தற்போதைய சந்தை விலையில் நகரத்தில் உள்ள ஒரு சொத்தின் மீதான வீட்டுக் கடனுக்குத் தகுதியுடையதா என்பதை இந்தக் குறியீடு காட்டுகிறது.


மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு அடிச்சுது லாட்டரி: விரைவில் கணக்கில் வட்டி தொகை, இப்படி செக் செய்யலாம்


ரெப்போ ரேட் அதிகரிப்பால் வீடு வாங்குவது குறைந்துள்ளது
 
ஜேஎலெல் வெளியிட்டுள்ள கணிப்பில், உலகளாவிய மந்தநிலை மற்றும் பணவீக்கப் போக்குகள் மற்றும் வலுவான தேவை காரணமாக விலைவாசி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) ரெப்போ விகிதத்தை அதிகரித்தன் காரணமாக வீடு வாங்குவது விலை உயர்ந்ததாகிவிட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​2023ல் வீடுகள் வாங்குவதற்காக கடன் வாங்கினால் அதற்கான வட்டி மேலும் மோசமடைந்துள்ளது. 


2024இல் இதே நிலை நீடிக்கலாம். ரெப்போ விகிதத்தின் ஸ்திரத்தன்மை, பணவீக்கம் சரிவு மற்றும் வீட்டு வருமானத்தில் ஒப்பீட்டளவில் அதிக வளர்ச்சி ஆகியவற்றால் வீடுகள் வாங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜேஎலெல் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனுடன், அடுத்த ஆண்டு ரெப்போ விகிதத்தில் 0.6 முதல் 0.8% வரை குறையும் என்று JLL கணித்துள்ளது. இது நடந்தால், வீடு வாங்கும் திறன் மேம்படும்.


மேலும் படிக்க | Penalty: வங்கிகளே சட்டத்தை மதிக்கவில்லை என்றால்? RBI கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கும்


சொந்த வீடு என்ற தங்கள் கனவை நிறைவேற்ற, பெரும்பாலான மக்கள் வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள். கடன் வாங்கும்போது வட்டி விகிதமும் முடிவெடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. வீட்டுக் கடனுக்கு ஃப்ளோட்டிங் அல்லது ஃபிக்ஸட் ரேட் சரியானதா (Fixed vs Floating Home Loan Rates) என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். இரண்டிலும் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. 


மாறும் வட்டி விகிதத்தில், சந்தை நிலவரத்தைப் பொறுத்து வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த விகிதம் பெஞ்ச்மார்க் விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நிலையான வட்டி விகிதத்தை தேர்ந்தெடுத்தால், வீட்டுக் கடன் வாங்கும்போது இருந்த வட்டி விகிதம் ஒருபோதும் மாறாது.


தற்போது வங்கிகள் அளிக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் இவை. 
வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்: SBI, ICICI, BoB, PNB
பேங்க் ஆஃப் பரோடா- 8.40% - 10.65%
பாரத ஸ்டேட் வங்கி- 8.40% - 10.15%
ஐசிஐசிஐ வங்கி- 8.95%-9.15%
பஞ்சாப் நேஷனல் வங்கி 8.5% முதல் 9%


மேலும் படிக்க | சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்ட திருநங்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ