7வது சம்பள கமிஷன் முக்கிய அப்டேட்: மத்திய ஊழியர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. ஏழாவது ஊதியக் குழுவின் பலனைப் பெறும் ஊழியர்கள் இதன் மூலம் பெருமளவில் பயனடைவார்கள். இதற்காக விதியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது மத்திய ஊழியர்களுக்கான அலுவலக குறிப்பாணையும் வழங்கப்பட்டது. இதில் பதவி உயர்வு தொடர்பான விதிகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தேவை விதியில் மாற்றம்: 
இந்நிலையில் இனி பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் (7th pay commission News) கீழ் பதவி உயர்வு பலன் கிடைக்கும். இதற்கான உத்தரவை சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ளது. பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் கீழ், ஊழியர்களின் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தேவை என்ற விதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சம்பள கமிஷனின் கீழ் வரும் அனைத்து பாதுகாப்பு ஊழியர்களும் இந்த திருத்தத்தில் உள் அடங்குவார்கள். இதனுடன், சேவை பாதுகாப்பு சிவில் ஊழியர்களின் பதவி உயர்வுக்கான அளவுகோல்கள் அமைக்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு நல்ல செய்தி: இனி கையில் அதிக சம்பளம் வரும்.. ஊதிய விதிகளில் மாற்றம்!!


பதவி உயர்வுக்கான அளவுகோல்களை நிர்ணயித்துள்ளது:
இதனிடையே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஊழியர்களின் பதவி உயர்வுக்கு பல்வேறு நிலைகளில் பணி அனுபவம் தேவை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு லெவல் 1ல் 2 முதல் 3 ஆண்டுகள் அனுபவம் இருப்பது அவசியமாகும். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்கப்படும்.


இருப்பினும், நிபந்தனைகள் மற்றும் தகுதிகளை பூர்த்தி செய்வது கட்டாயமாகும். அதன்படி லெவல் 1 முதல் 3 வரை, என 3 ஆண்டுகள் அனுபவம் தேவை. லெவல் 2 முதல் 4 வரை, ஊழியர்களுக்கு 3 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் தேவை, அதே சமயம் பதவி உயர்வுக்கு, லெவல் 17 வரையிலான ஊழியர்கள் ஒன்று முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே பதவி உயர்வு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அகவிலைப்படி விரைவில் நான்கு சதவீதம் அதிகரிக்கப்படும்:
இதைக்கிடையில் மத்திய ஊழியர்களுக்கு ஜூலை அரையாண்டுக்கான அகவிலைப்படியில் நான்கு சதவீதம் அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இது தொடர்பாக கூடிய விரைவில் முறைப்படி அறிவிப்பு வெளியாகும். மேலும் இந்த அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்கலாம். இதன் மூலம் ஊழியர்கவின் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கலாம். இது தவிர, தற்போது பாதுகாப்பு அமைச்சக ஊழியர்களுக்கும் பதவி உயர்வு பலன் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு 
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆண்டுதோறும் இரு முறை அதிகரிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் நிதி அமைச்சகம் அதை அங்கீகரிக்கிறது. தொழில்துறை பணவீக்க புள்ளிவிவரங்களுடன் (AICPI) இணைத்து தொழிலாளர் அமைச்சகம் இதை தீர்மானிக்கின்றது. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகள் அகவிலைப்படி உயர்வுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதிகள் ஆகும்.


வழக்கமாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும். இந்த அகவிலைப்படி உயர்வானது, மத்திய அரசு ஊழியர்கள் பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் விலைவாசியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | 7th pay Commission ஜாக்பாட் செய்தி: இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு... ஊதிய உயர்வு கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ