ஆன்லைன் முறையில் எல்ஐசி பிரீமியம் செலுத்துதல்: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நாட்டின் மிகப்பெரிய மற்றும் பழமையான ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகும். இதில் நாடு முழுவதும் கோடிக்கணக்கான பாலிசிதாரர்கள் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு ஆண்டும் பாலிசிதாரர் தனது காப்பீட்டின் பிரீமியத்தை செலுத்த வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக எல்ஐசி ஆன்லைனில் பிரீமியம் செலுத்தும் வசதியை தொடங்கியுள்ளது. முன்னதாக, வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பிரீமியம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்து வரும் காலகட்டத்தில், எல்ஐசி தனது சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ளது.


எல்ஐசியின் பிரீமியத்தை ஆன்லைனில் செலுத்தி ரசீதைப் பெறலாம். ஆன்லைனில் பிரீமியம் செலுத்த, எல்ஐசி பே டைரக்ட் செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது தவிர, நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் புக்கிங் செய்யலாம். ப்ரீமியம் செலுத்துவதற்கான ஆன்லைன் செயல்முறையைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேலும் படிக்க | Education Loan: பெற்றோர்களின் கவனத்திற்கு; உங்கள் பிள்ளைகளுக்கு சிக்கல் 


பிரீமியம் நிலையை செக் செய்யும் செயல்முறை: 


1. இதற்கு முதலில் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.licindia.in/-ஐ கிளிக் செய்யவும்.


2. இதற்குப் பிறகு உங்கள் பெயர், பாலிசி எண்ணை உள்ளிடவும்.


3. இது தவிர, எல்ஐசியின் ஹெல்ப்லைன் எண்ணான 022-68276827-ஐ அழைத்தும் நீங்கள் டெபாசிட் செய்ய வேண்டிய நிலவரத்தையும் அறிந்து கொள்ளலாம்.


4. மேலும், LICHELP <பாலிசி எண்> எழுதி 9222492224 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். இந்த எண்ணுக்கு செய்திகளை அனுப்புவதற்கு நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.


 எல்ஐசி பே டைரக்ட் ஆப் மூலம் பிரீமியம் செலுத்தும் செயல்முறை: 


1. இதற்கு, நீங்கள் செயலியைத் திறந்து, பிரீமியம் கட்டுவதற்கான  Pay Premium ஆப்ஷனுக்குச் செல்லவும்.


2. இதன் பிறகு Proceed ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


3. அதன் பிறகு பிரீமியம் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


4. இதற்குப் பிறகு உங்கள் பாலிசி எண், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி (இமெயில் ஐடி) போன்றவற்றை உள்ளிடவும்.


5. இதற்குப் பிறகு அனைத்து தகவல்களும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டு, பணம் செலுத்தும் ஆப்ஷன் தோன்றும்.


6. நெட் பேங்க், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யுபிஐ போன்றவற்றின் மூலம் பணம் செலுத்துங்கள்.


7. இதற்குப் பிறகு, மொபைலில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு பிரீமியத்தை செலுத்துங்கள்.


8. இதற்குப் பிறகு, எலக்ட்ரானிக் ரசீதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.


9. இந்த வகையில் உங்கள் பிரீமியம் செலுத்தப்படும்.


மேலும் படிக்க | குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் பெற சுலப வழிமுறைகள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR