LIC: புதிய குழு காப்பீட்டு பாலிசி அறிமுகம், வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கும் நன்மை

LIC New Policy: நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) புதிய குழு காப்பீட்டு பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 6, 2022, 07:09 PM IST
  • எல்ஐசி புதிய குழு காப்பீட்டு பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தக் பாலிசியின் பெயர் எல்ஐசியின் குரூப் ஆக்சிடென்ட் பெனிபிட் ரைடர் ஆகும்.
  • எல்ஐசி இந்த பாலிசியை உள்நாட்டு சந்தைகளில் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது.
LIC: புதிய குழு காப்பீட்டு பாலிசி அறிமுகம், வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கும் நன்மை title=

எல்ஐசி புதிய பாலிசி: நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) புதிய குழு காப்பீட்டு பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கை ஜூன் 3ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தகவலை இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஃபைலிங் மூலம் அளித்துள்ளது. 

இந்தக் பாலிசியின் பெயர் எல்ஐசியின் குரூப் ஆக்சிடென்ட் பெனிபிட் ரைடர் ஆகும். இருப்பினும், இந்த பாலிசி பற்றி இன்னும் அதிகம் அறியப்படவில்லை. ஆனால் பிஎஸ்இ-இல் தாக்கல் செய்யப்பட்ட சுற்றறிக்கையின்படி, இது இணைக்கப்படாத, அதாவது நான்-லிங்க்ட், நான் பார்டிசிபேடிங்க், குழு சுகாதார ரைடர் பாலிசி ஆகும். இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி இந்த பாலிசியை உள்நாட்டு சந்தைகளில் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐபிஓவுக்குப் பிறகு இரண்டாவது பாலிசி 

காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி சமீபத்தில் பங்குச் சந்தையில் தனது பங்குகளை பட்டியலிட்டது. பங்குச்சந்தையில் எல்ஐசி-யின் நுழைவுக்குப் பிறகு, இது நிறுவனத்தின் இரண்டாவது புதிய பாலிசி ஆகும். இதற்கு முன், எல்ஐசி மற்றொரு புதிய பாலிசியான பீமா ரத்னாவை மே 27 அன்று அறிமுகப்படுத்தியது.

மேலும் படிக்க | LIC பங்குதாரர்களுக்கு நல்ல செய்தி: ஈவுத்தொகை கிடைக்கவுள்ளது, விவரம் இதோ 

மே 30 அன்று காலாண்டு முடிவுகள் வந்தன

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) அதன் காலாண்டு முடிவுகளை மே 30 அன்று வெளியிட்டது. மார்ச் காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் சுமார் 17 சதவீதம் சரிந்து ரூ.2409 கோடியாக உள்ளது. அதே நேரத்தில், காப்பீட்டு நிறுவனம் தனது பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.1.5 ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவு இதுவாகும்.

சமீபத்தில் ஐபிஓ வந்தது

எல்ஐசி அதன் ரூ.21,000 கோடி ஐபிஓ-வை மே 17 அன்று பட்டியலிட்டது. மக்கள் மத்தியில் இதில் அதிக ஆர்வம் இருந்தபோதிலும், எல்ஐசி ஐபிஓ சுமார் 8 சதவீத தள்ளுபடியில் பட்டியலிடப்பட்டது. 

நியூ சில்ட்ரன் மணி பேக் பிளான் திட்டம் என்ற புதிய திட்டத்தையும் எல்ஐசி கொண்டுள்ளது. உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பினால், இன்றே எல்ஐசியின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குங்கள். இந்த சிறு சேமிப்பின் மூலம் உங்கள் குழந்தை எதிர்காலத்தில் கோடீஸ்வரனாக மாறுவார். இதற்கு நீங்கள் தினமும் 150 ரூபாய் மட்டுமே சேமித்தால் போதும். 

இந்த பாலிசியின் விவரம் என்ன? 
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் நியூ சில்ட்ரன் மணி பேக் பாலிசி 25 ஆண்டுகளுக்கானது. இதில் மெச்யூரிடி தொகையை தவணைகளில் பெறுவீர்கள். உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும்போது இந்த தொகை முதல் முறையாக செலுத்தப்படுகிறது. இரண்டாவது முறை குழந்தைக்கு 20 வயதாகும்போதும், மூன்றாவது முறை 22 வயதாகும்போதும் அளிக்கப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஆன்லைனில் PF கணக்கின் இருப்பை சரிபார்ப்பது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News