புதுடெல்லி: டிராக்டர் வாங்கப் போகிறீர்கள் என்றால், கொஞ்சம் கவனமாக இருங்கள். பிரதமர் கிசான் என்ற பெயரில் மோடி அரசின் திட்டங்களின் உதவியைப் பெற்று, மோசடி செய்பவர்கள் இதுபோன்ற பல மோசடி இணையதளங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மத்திய அரசு மானியம் தருகிறது என்று கேள்விப்பட்டீர்கள் என்றால் கவனமாக இருங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா என்ற பெயரில் ஒரு இணையதளம் உருவாகியுள்ளது, அது அரசாங்க இணையதளமாக தன்னைக் காட்டிக் கொள்கிறது. அதன் இணையதள URL- kisantractorsyojana.in. இந்த இணையதளத்தின் பெயரில் விவசாயிகளிடம் மோசடி செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.  


PIB உண்மை சரிபார்ப்பு சோதனை 


அரசாங்க ஊடக வலைத்தளமான PIB இன் உண்மை சரிபார்ப்பு (FactCheck) குழு இந்த திட்டம் தொடர்பாக சமூக ஊடக தளம் 'X' இல் சரிபார்ப்பு சோதனையை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தவில்லை என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Dates Farming: தண்ணியே வேண்டாம்! மரம் வச்சா போதும், வருசத்துக்கு ரூ 20 லட்ச லாபம்


PIB Fact Check, "பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வாங்க வேளாண் அமைச்சகம் மானியம் தருவதாக ஒரு போலி இணையதளம் பொய்யாகக் கூறுகிறது" என்று தெரியவந்துள்ளது. 


இந்த இணையதளம் மோசடியானது என்றும் அதை நம்பக்கூடாது என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. வேளாண் அமைச்சகம் அத்தகைய திட்டத்தை செயல்படுத்தவில்லை.



பிரதம மந்திரி குசும் யோஜனா திட்டம்


சில நாட்களுக்கு முன்பு, பிரதம மந்திரி கிசான் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பிரச்சாரம் (PM KUSUM Yojana) தொடர்பாக மோசடி நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. இத்திட்டத்தின் கீழ், வேளாண்மைக்கு முக்கியமான பாசனத்திற்காக சோலார் பம்புகள் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பவதாக மோசடி செய்யப்படுகிறது. விவசாயிகளை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.


மேலும் படிக்க | விவசாயிகளுக்கு அரசு மானியம்! வாழ வைக்கும் வாழைக்கு 40% மானியம்


அரசு எச்சரிக்கை 
இது குறித்து மத்திய அரசு விவசாயிகளுக்கு, மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பிஎம் குசும் யோஜனா என்ற பெயரில் சோலார் பம்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, பதிவுக் கட்டணம் மற்றும் பம்ப் விலையை ஆன்லைனில் செலுத்துமாறு பல போலி இணையதளங்கள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள் விவசாயிகளைக் கேட்டுக் கொண்டிருப்பதாக அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.


பல போலி இணையதளங்கள் அரசு இணையதளங்கள் எனக் காட்டி மக்களை மிரட்டி பணம் பறித்து வந்தன. இதுபோன்ற சூழ்நிலையில், விவசாயிகள் ஏதேனும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் அல்லது எந்த இணையதளத்தில் தங்கள் தகவல்களைப் பகிர்வதற்கு முன்பும் அது சரியான இணையதளமா இல்லையா என்பதை ஒருமுறை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது.


மேலும் படிக்க | இந்தியாவில் ரிலையன்சுடன் கைகோர்க்கும் வால்ட் டிஸ்னி ஸ்டார்! ஸ்டார் இந்தியாவும் அம்பானிக்கே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ