ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்னர் ஃபிக்ஸட் டெபாசிட் தொடர்பான விதிகளை மாற்றியுள்ளதுடன், தற்போது சில புதிய விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.  ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவிற்குப் பிறகு, பல அரசு மற்றும் அரசு சாரா வங்கிகளும் எஃப்டி மீதான வட்டி விகிதங்களுக்கு வரவேற்பு அளித்துள்ளது.  ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள மாற்றத்தின்படி, இப்போது முதிர்வு முடிந்த பிறகு, நீங்கள் தொகையை க்ளைம் செய்யவில்லை என்றால், அதற்கு குறைவான வட்டியைப் பெறுவீர்கள்.  இந்த வட்டி சேமிப்பு கணக்கில் பெறப்படும் வட்டிக்கு சமமாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ-வில் பம்பர் ஏற்றம், ரூ. 40,000 வரை சம்பளம் அதிகரிக்கும்


தற்போது, ​​வங்கிகள் வழக்கமாக 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 5%க்கும் அதிகமான வட்டியை அளிக்கின்றன, அதேசமயம் சேமிப்புக் கணக்கில் வட்டி விகிதம் 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை இருக்கும்.  ரிசர்வ் வங்கி வழங்கிய தகவலின்படி, எஃப்டி கணக்குகள் முதிர்ச்சியடைந்து, தொகை செலுத்தப்படாமலோ அல்லது உரிமைகோரப்படாமலோ இருந்தால், அதன் சேமிப்புக் கணக்கின் படி வட்டி விகிதம் அல்லது முதிர்ச்சியடைந்த எஃப்டிக்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம், எது குறைவாக இருந்தாலும் வழங்கப்படும்.  இந்த புதிய விதிகள் அனைத்து வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், உள்ளூர் பிராந்திய வங்கிகளில் உள்ள டெபாசிட்களுக்கு பொருந்தும்.



உதாரணமாக 5 வருட முதிர்ச்சியுடன் கூடிய எஃப்டி கணக்கில் இருந்து இந்தப் பணத்தை எடுக்கவில்லை எனில் வங்கியின் சேமிப்புக் கணக்கின் வட்டியை விட எஃப்டியில் பெறப்படும் வட்டி குறைவாக இருந்தால், எஃப்டி மீதான வட்டியை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள்.  சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் வட்டியை விட எஃப்டியில் கிடைக்கும் வட்டி அதிகமாக இருந்தால், முதிர்வுக்குப் பிறகு சேமிப்புக் கணக்கின் வட்டியைப் பெறுவீர்கள்.  முன்னதாக உங்கள் எஃப்டி முதிர்ச்சியடைந்த போது, ​​நீங்கள் அதை திரும்பப் பெறவில்லை அல்லது உரிமை கோரவில்லை என்றால், நீங்கள் முன்பு எஃப்டி செய்த அதே காலத்திற்கு வங்கி உங்கள் எஃப்டியை நீட்டிக்கும்.  ஆனால் இப்போது அது நடக்காது, இப்போது முதிர்வு காலத்தில் பணத்தை எடுக்கவில்லை என்றால், அதற்கு எஃப்டி வட்டி கிடைக்காது.  எனவே முதிர்வு முடிந்த உடனேயே பணத்தை எடுப்பதே நல்லது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம், டிஏ, இபிஎஃப், கிராஜுவிட்டி அனைத்திலும் பம்பர் ஏற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR