ஜூலை மாதம் முதல் பள்ளிகளிலும், ஆகஸ்ட் மாதம் முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் செயல்பட துவங்கும் என ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ஜூலை 1 முதல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு கற்பித்தல் பணிகளைத் தொடங்குவதன் மூலம், 6, VII, VIII மற்றும் IX வகுப்புகளுக்கு 15 நாட்களுக்குப் பிறகு மற்றும் ஆகஸ்டில் ஆரம்ப வகுப்புகளுக்கு ஒரு கட்டமாக பள்ளிகளை மீண்டும் திறப்போம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


READ | தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வுகள் மூன்று முக்கிய பாடங்களுக்கு மட்டுமே நடத்தப்படும்...


"வகுப்புகள் ஷிப்டுகளின் அடிப்படையில் நடைபெறும், இதனால் ஒரு வகுப்பின் பாதி மாணவர்கள் முதல் ஷிப்டில் கலந்துகொள்வார்கள், மீதமுள்ளவர்கள் இரண்டாவது ஷிப்டில் வருவார்கள். ஷிப்டுகளின் நேரம் குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையில், ஹரியானா பள்ளி கல்வி வாரியம் (BSEH) 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 8 -ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.


அதன் தலைவர் ஜக்பீர் சிங், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நிலுவையில் உள்ள தேர்வுகளுக்கு தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.


இதனிடையே தமிழ்நாடு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் தேர்வு எழுத வருகை தரும் மாணவர்களுக்கு 2020 ஜூன் 11 முதல் மாநிலம் முழுவதும் பள்ளி விடுதிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரவிருக்கும் SSLC மற்றும் +2 தேர்வுகள் 2020 க்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக இந்த முடிவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். 


READ | தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் SSLC தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு...


இந்த ஆண்டு, நாட்டில் கொரோனா வைரஸ் வெடித்ததால் தமிழக வாரிய தேர்வுகள் 2020 பல முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. . இருப்பினும், சமீபத்தில், முழு அடைப்பு வழிகாட்டுதல்களில் தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழக அரசு வாரியத் தேர்வுகளுக்கான தேர்வு தேதிகளை அறிவித்தது. அறிவிக்கப்பட்ட தேதிகளின்படி, தமிழ்நாடு SSLC மற்றும் +2 தேர்வுகள் 2020 ஜூன் 15 முதல் நடத்துகிறது.