புதுடெல்லி: நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிர்வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  https://t.co/8JYWQDfGfj என்ற தேசிய ஸ்காலர்ஷிப்கள் போர்ட்டல் இணையதளத்தில் இந்த உதவித்தொகையை பெறும் தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேசிய ஸ்காலர்ஷிப்கள் போர்ட்டல் என்பது மாணவர் விண்ணப்பம், விண்ணப்ப ரசீது, செயலாக்கம், அனுமதி மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்குதல் என பல்வேறு சேவைகளை வழங்குகிறது. தேசிய மின்-ஆளுமைத் திட்டத்தின் (NeGP) கீழ் தேசிய உதவித்தொகை போர்டல் மிஷன் பயன்முறை திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்வி ஊக்கத்தொகைக்காக பெறப்படும் விண்ணப்பங்களை விரைவாகவும் திறம்பட கையாள்வதற்கும், எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் நேரடியாக பயனாளிகளின் கணக்கில் கல்வி ஊக்கத்தொகையை வழங்குவதற்கும் உதவும் இந்த போர்ட்டல், எளிமைப்படுத்தப்பட்ட, பணி சார்ந்த, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்குகிறது.


மேலும் படிக்க | வெளியானது ICSI CS புரொபஷனல் 2022 தேர்வு முடிவுகள்


தேசிய மின்-ஆளுமைத் திட்டத்தின் கீழ் தேசிய உதவித்தொகை போர்ட்டலின் மிஷன் மோட் திட்டம் (MMP), நாடு முழுவதும் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களால் தொடங்கப்பட்ட பல்வேறு உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்த பொதுவான மின்னணு போர்ட்டலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் இந்த போர்ட்டல், வெளிப்படையான தரவுத்தளத்தை உருவாக்கவும், செயலாக்கத்தில் போலிகளை தவிர்க்கவும் உதவுகிறது.  மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறை வழங்கும் இந்த போர்ட்டலில், அனைத்து உதவித்தொகை தகவல்களும் ஒரே குடையின் கீழ் கிடைக்கும்.


மேலும் படிக்க | TNPSC வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கியது


அனைத்து உதவித்தொகைகளுக்கும் ஒரே ஒருங்கிணைந்த விண்ணப்பம் போதும் என்பது இதன் சிறப்பம்சம்.  ஸ்காலர்ஷிப் விநியோகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் கண்காணிக்க வசதியாக விரிவான MIS அமைப்பு கொண்ட இந்த போர்ட்டலில், ஒரு மாணவர் பதிவு செய்தது முதல் நிதி விநியோகம் வரை அனைத்து தகவல்களும் கிடைக்கும். 


இந்த போர்ட்டலில், நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். எதிர்வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் இந்த கல்வி ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்


மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கவும்


மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ