Telangana Election Exit Poll Results 2023 Updates: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்கள் ஏற்கனவே முடிந்த நிலையில், இன்று தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 63.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (BRS), பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், ஐந்து மாநிலங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மாலை வெளியான கருத்துக் கணிபுகளின் படி, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. கருத்துக்கணிப்புகளின்படி, காங்கிரஸ் 58 முதல் 68 இடங்களையும், பிஆர்எஸ் 46 முதல் 56 இடங்களையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணிப்புகளில் பாஜகவிற்கு 4 முதல் 9 இடங்கள் வரை வழங்கப்பட்டுள்ளன. AIMIM 5 முதல் 7 இடங்களைப் பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


பல்வேறு கருத்துக் கணிப்பு ஏஜன்சிகளின் கணிப்புகள் இதோ:


CNX - BRS: 31-47 இடங்கள், காங்கிரஸ்: 63-79 இடங்கள், பாஜக 2-4 இடங்கள், AIMIM 5-7 இடங்கள்


Jan Ki Baat  - BRS: 40-55 இடங்கள், காங்கிரஸ்: 48-64 இடங்கள், பாஜக 7-13 இடங்கள், AIMIM 4-7 இடங்கள்


Matrize - BRS: 46-56 இடங்கள், காங்கிரஸ்: 58-68 இடங்கள், பாஜக 4-9 இடங்கள், AIMIM 5-7 இடங்கள்


Pollstrat - BRS: 48-58 இடங்கள், காங்கிரஸ்: 49-59 இடங்கள், பாஜக 5-10 இடங்கள், AIMIM 6-8 இடங்கள்


தெலுங்கானாவின் கணிப்புகள் 2018 தேர்தல் காட்சியை நினைவுபடுத்துகின்றன


2018 வாக்கெடுப்பில், BRS 119 இடங்களில் 88 இடங்களைப் பெற்று 47.4% வாக்குகளைப் பெற்று குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் 19 இடங்களுடன் பின்தங்கியது, இறுதியில் கே சந்திரசேகர் ராவ் முதல்வராக பதவியேற்க இது வழிவகுத்தது.


மேலும் படிக்க | Election Exit Poll Results Updates: 5 மாநிலங்களில் யாருக்கு ஆட்சி? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்


எக்ஸிட் போல் என்றால் என்ன?


கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளை முன்னறிவிப்பதற்காக கணக்கெடுப்பு நிறுவனங்களுக்கு ஒரு கருவியாகச் செயல்படுகின்றன. வாக்குச் சாவடியை விட்டு வெளியேறும் வாக்காளர்களிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்த கணிப்புகள் உருவாக்கப்படுகின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளைப் போலன்றி, வாக்கெடுப்புக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவைக் கணிக்க உதவும்.


கருத்துக் கணிப்புகள் எவ்வளவு நம்பகமானவை?


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் சில சமயம் பொய்யான நிகழ்வுகளும் உள்ளன. வாக்காளர்களின் பதில்களில் உள்ள முரண்பாடுகள், ஏஜென்சிகளுக்கிடையேயான வேறுபாடுகள் அல்லது தவறான தகவலை வழங்குபவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் ஆகியவை சாத்தியமான தவறுகளுக்கு பங்களிக்கின்றன. இருப்பினும், சில நேரங்களில் இந்த கருத்துக்கணிப்புகள் உண்மையான தேர்தல் முடிவுகளுடன் ஒத்துப்போகின்றன.


மேலும் படிக்க | EXIT POLL 2023: சத்தீஸ்கரில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி! மீண்டும் “கை”


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ