EXIT POLL 2023: சத்தீஸ்கரில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி! மீண்டும் “கை”

Chhattisgarh Exit Poll Results 2023: சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மிக கடுமையான போட்டி நிலவும் என எக்ஸிட் போல் கணித்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்ன சொல்கிறது? பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 30, 2023, 08:08 PM IST
EXIT POLL 2023: சத்தீஸ்கரில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி! மீண்டும் “கை” title=

சத்தீஸ்கர் எக்ஸிட் போல் தேர்தல் முடிவுகள் 2023: சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு முறையும் போலவே இம்முறையும் தேர்தலுக்கு முன்பே கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. சத்தீஸ்கரின் கருத்துக்கணிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. மாநிலத்தில் மிகப்பெரிய கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. CVoter இன் கருத்துக்கணிப்பின்படி, சத்தீஸ்கரில் காங்கிரஸ் 43.4% வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் 41.2% ஆக இருக்கலாம். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, மாநிலத்தில் வாக்குப் பங்கீட்டின் அடிப்படையில் பாஜக அதிக சதவீதத்தை பெற்றுள்ளது. பாஜகவின் வாக்கு சதவீதம் 8.2% அதிகரிக்கலாம்  எனக் கூறப்பட்டுள்ளது.

எக்ஸிட் போல் என்றால் என்ன? 

சத்தீஸ்கர் மாநிலத்தின் கருத்துக்கணிப்பைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதேநேரத்தில் இது வெறும் மதிப்பீடு மட்டும் தான். எக்ஸிட் போல் என்பது வாக்காளர்கள் கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பு வாக்களித்த பிறகு செய்யப்படுகிறது. இதன்மூலம் தேர்தலில் எந்தக் கட்சிக்கு அதிக பலம் உள்ளது என்பது அறிந்துக்கொள்ளலாம். ஆனால் இது தான் இறுதி முடிவல்ல. சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும்.

சத்தீஸ்கர் மாநிலத்தை பற்றி பேசினால், மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இரு கட்சிகளும் வெற்றிக்கு அருகில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க - Election Exit Poll Results Updates: 5 மாநிலங்களில் யாருக்கு ஆட்சி? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்

CVoter கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

சத்தீஸ்கரில் CVoter இன் கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் 41 முதல் 53 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதி மதிப்பீட்டின்படி, மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் பெரும்பான்மையைப் பெற முடியும். அதே நேரத்தில் பாஜக 36 முதல் 48 இடங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில், காங்கிரசுக்கு 71 இடங்களும், பாஜகவுக்கு 14 இடங்களும் உள்ளன.

சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தேர்தல் பிரசாரத்தின்போதே மகாதேவ் ஆப் தொடர்பான ரூ.508 கோடி ஊழல் குறித்து அமலாக்க இயக்குனரகம் விசாரணையைத் தொடங்கியது. ED இன் விசாரணையும் முதல்வர் பூபேஷ் பாகேலுடன் தொடர்புடையது. மகாதேவ் ஆப் ஊழல் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பூபேஷ் பாகேலை பாஜக கடுமையாக குறிவைத்தது.

சத்தீஸ்கர் எக்ஸிட் போல்கள் 2023: 

ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ், டைனிக் பாஸ்கர் மற்றும் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் ஆகியவை காங்கிரஸின் வெற்றியைக் குறிக்கின்றன.

சத்தீஸ்கர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் 2023: 

TV 9 Bharatvarsh- Polstrat காட்டுகிறது பாஜகவை விட காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ்: 40-50
பாஜக: 35-45
மற்றவை: 0-3
மொத்தம்: 90

சத்தீஸ்கர் தேர்தல் கருத்துக் கணிப்புகள் 2023: டைனிக் பாஸ்கர் 

காங்கிரஸ்: 46-55
பாஜக: 35-45
மற்றவை: 0-10
மொத்தம்: 90

மேலும் படிக்க - ராஜஸ்தானில் தொங்கு சட்டசபை? கடும் போட்டி? கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

சத்தீஸ்கர் எக்சிட் போல்ஸ் 2023: ரிபப்ளிக் டிவி- மேட்ரைஸ்

காங்கிரஸ்: 44-52
பாஜக: 34-42
மற்றவை: 00-02
மொத்தம்: 90

7.23 லட்சம் புதிய வாக்காளர்கள்

சத்தீஸ்கரில் மொத்த வாக்காளர்கள் 02.03 கோடி. இவர்களில் 01.01 கோடி பேர் ஆண்கள், 01.02 கோடி பேர் பெண்கள். 07.23 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர்.

2.3 கோடி வாக்காளர்கள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 இடங்களில் 51 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 10 இடங்கள் எஸ்சிக்கும், 29 இடங்கள் எஸ்டிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் மொத்தம் 2.3 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

90 இடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்

மாநிலத்தில் மொத்தம் 90 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது, இதில் முதல் கட்டமாக 20 இடங்களுக்கும், இரண்டாம் கட்டமாக 70 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கரில், முதல் கட்டமாக 20 இடங்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 70 இடங்களுக்கு நவம்பர் 17ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

டிசம்பர் 3ம் தேதி தேர்தல் முடிவுகள்

ED குற்றச்சாட்டுகளை மறுத்த காங்கிரஸ், முழு பலத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்தது. மாநிலத்தில் பழங்குடியினருக்கு ஆதரவான பிம்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் முயன்றது. கோவிலை புதுப்பித்தல் மற்றும் இந்து மத சுற்றுலா என முதல்வர் பாகேல் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்தார். பாஜகவின் தீவிர தேர்தல் பிரச்சாரம் மற்றும் காங்கிரஸின் ஐந்தாண்டு பணியின் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும்.

மேலும் படிக்க - “பிரதமர் மோடி என்றால் பநோத்தி” -ராகுல் காந்தி கடும் தாக்கு.. பாஜகவினர் பதிலடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News