நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டை ஒரு மசாலாவாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இலவங்கப்பட்டை பல மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. ஆகையால் ஆயுர்வேதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை மிகவும் நன்மை பயக்கும் என்று பலர் கருதுகின்றனர். இரத்த சர்க்கரையை குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயை நிர்வகிக்க இலவங்கப்பட்டை உதவுகிறது என்று நம்பப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில ஆண்டுகளில் செய்யப்பட்ட சில ஆராய்ச்சிகளில், இலவங்கப்பட்டை நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும், பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் துல்லியமாக கண்டறியப்படவில்லை. இலவங்கப்பட்டை நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் சர்க்கரை நோயாளிகளுக்கு இதன் மூலம் நன்மை கிடைக்கும் என்றே நம்பப்படுகின்றது. 


இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் கலவையான முடிவுகள்


இலவங்கப்பட்டை என்பது சமையல் மற்றும் பேக்கிங்கில் பயன்படுத்தப்படும் மரத்தின் பட்டை ஆகும். பாரம்பரிய ஆயுர்வேதத்தில், இலவங்கப்பட்டை கீல்வாதம், வயிற்றுப்போக்கு, அழற்சி போன்ற பல நோய்களின் நிவாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இலவங்கப்பட்டையில் உள்ள பயோஆக்டிவ் கலவை இரத்த சர்க்கரை நிர்வாகத்தை ஆதரிக்க உதவுகிறது என்றும் நம்பப்படுகிறது. 


மேலும் படிக்க | இந்த 2 பொருட்கள் போதும்! உடலில் வைட்டமின் பி-12 குறைபாடு அடியோட நீங்கிடும் 


இலவங்கப்பட்டையை இந்த வழியில்  பயன்படுத்தலாம்


இலவங்கப்பட்டை தேநீர்


இலவங்கப்பட்டை ஒரு மசாலா பொருளாகும். இது உணவின் சுவையை மேம்படுத்த பயன்படுகிறது. கூடுதலாக, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இலவங்கப்பட்டை தேநீர் உதவியாக இருக்கும். இலவங்கப்பட்டை பல மருத்துவ கூறுகளைக் கொண்டுள்ளது என நிபுணர்களின் கூறுகிறார்கள். இது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. டைப் 2 நீரிழிவு மற்றும் இன்சுலின் எதிர்ப்பில் அதன் உட்கொள்ளல் நன்மை பயக்கும். காலை மற்றும் மாலை தினமும் இரண்டு கப் இலவங்கப்பட்டை தேநீர் உட்கொள்ளுங்கள். அதனுடம் தினமும் நடைபயிற்சி செய்வதும் நன்மை பயக்கும். 


இலவங்கப்பட்டை நீர்


நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்து, இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், நீங்கள் இலவங்கப்பட்டை இந்த எளிதான வழியில் பயன்படுத்தலாம். இதற்கு, மூன்று டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூளை ஒரு லிட்டர் தண்ணீரில் 20 நிமிடங்கள் கொதிக்க விடவும். அதன் பின்னர், இந்த தண்ணீரை நாள் முழுவதும் உட்கொள்ளுங்கள். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.


 பல ஆராய்ச்சிகள் மூலம் இலவங்கப்பட்டை நீரிழிவு மருத்துவத்தில் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோயின் விளைவுகளை குறைப்பதில் இலவங்கப்பட்டை பயனுள்ளதாக இருக்கும் என்பதை பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கால் விரல்களில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியப்படுத்த வேண்டாம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ