இந்தியாவில் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.50 கோடியைத் தாண்டியது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19 பரவலின் மிக மோசமான கால கட்டத்தை காணும் இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 2.73 லட்சம் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது. இப்போது 20 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 புதிய நோய்த்தொற்றுகள், 1,619 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில், 1,44,178 பேர் குணமடைந்துள்ளனர்


உலகில் இரண்டாவது மிக மோசமாக, கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்புக்குள்ளான நாடாக உள்ள இந்தியாவில் இப்போது மொத்தம் 1,50,61,919 கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 19,29,329 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,29,53,821 பேர் குணமடைந்துள்ளனர்.


ALSO READ | பிரதமர் தினம் 19 மணி நேரம் பணியாற்றுகிறார்: கொரோனா ‘அரசியல்’ குறித்து பியூஷ் கோயல்


நாட்டில் 1,78,769 பேர் கோவிட் -19 காரணமாக இறந்துள்ளனர். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவில் 2,61,500 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகின.இரண்டாவது அலை வீரியமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.


மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 12 மாநிலங்களுக்கு குறிப்பாக, மகாராஷ்டிராவுக்கு முன்னுரிமை அளித்து ரயில்வேயின் பசுமை வழித்தடம் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.


தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பல மாநிலங்கள் லாக்டவுன் (Lockdown)  நடவடிக்கைகள், இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளன.


ALSO READ | கொரோனா தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR