COVID-19 Updates: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 88,74,290 என்ற எண்ணிக்கையிலும் பலி எண்ணிக்கை 1,30,519 ஆகவும் உயர்ந்துவிட்டன. இந்தியா அன்லாக் 6.0 க்குள் நுழைகிறது, ஆனால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட 5.0 வழிகாட்டுதல்கள் நவம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs (MHA)) கூறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தளர்வில் சினிமா அரங்குகள், மல்டிபிளெக்ஸ், கண்காட்சி அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை சிலபல கட்டுப்பாடுகளின் கீழ் திறக்கப்பட்டன. 


இதற்கிடையில், நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88,74,290 ஆக உயர்ந்துவிட்டது. 1,30,519 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 
மத்திய சுகாதார அமைச்சக வலைத்தளத்தின் இந்தத் தகவலை தெரிவிக்கித்துள்ளது. உலகளவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,301,156 ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,316,994 ஆக உயர்ந்துவிட்டது.


  • தனது தயாரிப்பில் உருவாகும் கொரோனா தடுப்பூசி 94.5% பயனுள்ளதாக இருக்கும் என்று அமெரிக்க நிறுவனம் மாடர்னா (Moderna) கூறுகிறது

  • நவம்பர் 24 முதல் எட்டு வாரங்களுக்கு நான்கு வாரங்களுக்கு நாட்டில் கூட்டங்கள் நடத்த  சுவீடன் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது

  • தென் கொரியா வியாழக்கிழமை முதல் கிரேட்டர் சியோல் பகுதியில் சமூக தொலைவு விதிகளை கடுமையாக்குகிறது

  • பிலடெல்பியா கிட்டத்தட்ட அனைத்து பொதுக் கூட்டங்களையும் தடைசெய்து பள்ளிகளை ஆன்லைன் கல்விக்கு ஊக்குவிக்கிறது.


Read Also | COVID-19 தடுப்பு: நுரையீரல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 6 முக்கிய உதவிக்குறிப்புகள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR