வெந்தயத்தின் பக்க விளைவுகள்: வெந்தயம் நாம் அனைவரும் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருளாகும்.  இதை உணவின் சுவையை அதிகரிக்க நாம் பயன்படுத்துகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வெந்தய விதைகள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இதனை உட்கொள்வதால் உடல் பருமன் கட்டுப்படுவது மட்டுமின்றி, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கிறது. செரிமானத்தை மேம்படுத்தவும், கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும் தூக்கத்தை மேம்படுத்தவும் வெந்தய விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெண்களின் கருப்பை சம்பந்தமான பெரும்பாலான நோய்களை குணமாக்குவதில் வெந்தயம் பயனுள்ளதாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெந்தய விதைகளின் பயன்பாடு ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்குகிறதோ, அதே அளவு, சில நோய்கள் இருந்தால், இதன் பயன்பாடு பல அபாயகரமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது. 


மேலும் படிக்க | பைல்ஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லிடுங்க 


வெந்தயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதை உட்கொண்டால், அது பல வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆரோக்கிய நிபுணர்கள். பைல்ஸ் நோயாளிகளும் இதை உட்கொள்ளும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். 


இந்த நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை உட்கொண்டால், அது அவர்களை விஷம் போல் பாதிக்கிறது. வெந்தயத்தை உட்கொள்வது பைல்ஸ் அறிகுறிகளை மோசமாக்கும். ஆகையால், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வெந்தய விதைகளை உட்கொள்வது பைல்ஸ் நோயாளிகளுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.


பைல்ஸ் நோயாளிகளின் சிரமங்களை வெந்தயம் எவ்வாறு அதிகரிக்கிறது? 


பைல்ஸ் நோய் காரணமாக இரத்தப்போக்கு உள்ளவர்கள் வெந்தயத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சாதாரண பைல்ஸ் இருந்தால் வெந்தயத்தை உட்கொள்ளலாம். துவக்க நிலை பைல்ஸுக்கு ஆசனவாயில் வலி ​​மற்றும் வீக்கம் போன்றவை அறிகுறிகள் ஆகும். வெந்தய விதைகளை உட்கொள்வதானால், சூடுபடுத்திய பின் பயன்படுத்த வேண்டாம். மாறாக தண்ணீரில் ஊற வைத்து உட்கொள்ளவும். 


வெந்தயத்தில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், மாங்கனீஸ், மெக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பண்புகள் உள்ளன. அவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. இதை உட்கொள்வதன் மூலம் பைல்ஸ் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம். வெந்தயக்கீரையை உட்கொள்வது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. 


மூல நோய் நோயாளிகள் வெந்தயத்தை எப்படி உட்கொள்வது:


நாள்பட்ட பைல்ஸ் நோய் உள்ளவர்கள், வெந்தயத்தை உட்கொள்ள, இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெந்தயத்தை வடிகட்டி அதன் நீரை உட்கொள்ள வேண்டும். வெந்தய விதைகளை மென்று சாப்பிடலாம். வெந்தயத்தை கொதிக்க வைத்து சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | மூலநோய் உள்ளவர்கள் பால் அருந்தலாமா? மருத்துவர்கள் கூறுவது என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ