மூலநோய் உள்ளவர்கள் பால் அருந்தலாமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

Piles Cure: எந்தவொரு ஆரோக்கியமான நபருக்கும் வாத, பித்த மற்றும் கபத்தின் சமநிலை மிகவும் முக்கியமானதாகும். பைல்ஸ் என்பது இந்த மூன்றின் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு நோயாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 30, 2022, 07:33 PM IST
  • பைல்ஸ் நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
  • பால் பொருட்கள், குறிப்பாக பாலை தவிர்க்க வேண்டும்.
  • ஏனெனில் பாலினால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மூலநோய் உள்ளவர்கள் பால் அருந்தலாமா?  மருத்துவர்கள் கூறுவது என்ன? title=

பைல்ஸ் என்பது இந்நாட்களில் பலரை அச்சுறுத்தும் ஒரு நோயாக உருவெடுத்துள்ளது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இதன் காரணமாக வேறு பல நோய்களும் ஏற்படலாம். எந்தவொரு ஆரோக்கியமான நபருக்கும் வாத, பித்த மற்றும் கபத்தின் சமநிலை மிகவும் முக்கியமானது. பைல்ஸ் என்பது இந்த மூன்றின் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு நோயாகும். 

ஆகையால் இதனை 'திரிதோஷஜ்' என்றும் அழைப்பார்கள். பைல்ஸ் நோயாளிகளில், வயிற்றில் சுத்தமின்மை, கழிவறைக்கு மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டும் உணர்வு, மலம் கழிக்கும் போது எரியும் உணர்வு மற்றும் அரிப்பு, சளி வருதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆசனவாயிலும் வீக்கம் ஏற்படும். பைல்ஸ் நோயாளிகள் உணவு விஷயத்தில் சிறப்பு முன்னெச்சரிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பைல்ஸ் நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பால் பொருட்கள், குறிப்பாக பாலை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாலினால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மலச்சிக்கல் ஏற்பட்டால், பைல்ஸ் நோயாளிக்கு அதிகமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

மேலும் படிக்க | Piles Cure: ஆபரேஷன் இல்லாமல் பைல்ஸுக்கு நிவாரணம் பெற இவற்றை உணவில் சேருங்கள் 

அதிக எண்ணெய் மற்றும் மசாலா பொருட்களையும் தவிர்க்க வேண்டும். எண்ணெய் பொருட்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். இதன் காரணமாக வீக்கம் ஏற்படும் அபாயமும் உள்ளது. துரித உணவுகளில் இருந்து விலகி இருப்பதும் நல்லது.

பைல்ஸ் நோயாளிகள் அதிகப்படியான டீ மற்றும் காபி அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காஃபின் உடலில் நீரிழப்பை ஏற்படுத்துவதோடு மலத்தின் கடினத்தன்மையை அதிகரிக்கும். இதனால் பிரச்சனை அதிகரிக்கலாம்.

பைல்ஸ் நோயாளிகள் கிட்னீ பீன்ஸ், பருப்பு, பீன்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவையும் மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும். இதைத் தவிர மிளகாயை உணவில் அதிகம் சேர்க்கக் கூடாது. இல்லையெனில் எரியும் பிரச்சனை ஏற்படும்.

பைல்ஸ் நோயாளிகளும் பேக் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இவற்றால் மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் ஆகியவை ஏற்படுகின்றன. ஆகையால் பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றிலிருந்து தூரமாக இருப்பது நல்லதாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பைல்ஸ் நோயை கட்டுப்படுத்தணுமா? ஓமத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News