இளநீர் நன்மைகளும் பகக் விளைவுகளும்: சித்திரை மாதம் தொடங்கும் முன்னதாகவே, வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. கடும் கோடையில், நம்மை காக்கும் அற்புத பானங்களில் ஒன்று இளநீர். தினமும் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இளநீரினால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் என்பதோடு, குடல் ஆரோக்கியத்திற்கும் பல அற்புத நன்மைகளை தருகிறது. மேலும் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கலாம். அதோடு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக தொற்று பிரச்சனை உள்ளவர்களுக்கு, இளநீர் ஒரு அருமருந்து. ஆனால், நமது முன்னோர்கள் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறியுள்ளனர். அளவிற்கு அதிகமாக எதை சாப்பிட்டாலும் அதனால், ஆரோக்கியத்திற்கு சிறிதளவு பாதிப்பு ஏற்படக்கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளநீரின் பக்க விளைவுகள்


அளவிற்கு அதிகமாக இளநீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து கொள்ளலாம். அதோடு, பெரும்பாலானவர்களுக்கு இளநீர் குடிப்பது, எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாது எனினும் ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக ஏதேனும் உடல்நல பிரச்சினைகள் இருந்தால், நீங்கள் எந்த அளவிற்கு இளநீர் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. அளவிற்கு அதிகமாக இளநீரை குடிப்பதால், உடலில் பொட்டாசியம் அளவு அதிகரித்து, ஹைப்பர் கேமியா (Hyperkalemia) பிரச்சனைக்கு வழி வகுக்கலாம்.


கால்சியம் பற்றாக்குறை


இளநீரை அளவிற்க்கு அதிகமாக அருந்துவதால், கால்சியம் போன்ற சில அத்யாவசிய ஊட்டச்சத்துக்கள், சிறுநீர் மூலமாக உடலில் இருந்து வெளியேறலாம். இதனால் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு, எலும்பு ஆரோக்கியம் மற்றும் மூட்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.


குறைந்த ரத்த அழுத்தம்


அளவிற்கு அதிகமான இளநீரை குடிக்கும் போது, உடலில் பொட்டாசியம் சத்து, தேவையான அளவை விட மிகவும் அதிகரிக்கும்போது, குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை உண்டாகும். அதிகப்படியான பொட்டாசியம், ஹைப்பர் கேமியாவை ஏற்படுத்துகிறது. இதனால் இதய பிரச்சினைகள், தசைகள் பலவீனமடைந்தல் போன்றவையும் உண்டாகலாம். மேலும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இளநீர் நல்லது என்றாலும், அளவோடு குடிப்பது நல்லது.


மேலும் படிக்க | உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க... இந்த காய்கறி ஜூஸ்கள் உதவும்!


குடல் சார்ந்த பிரச்சினைகள்


அதிக இளநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அளவிற்கு அதிகமாகும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் உடலில் வீக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலர்ஜி காரணமாக, சருமத்தில் அரிப்பு போன்ற பிரச்சனையும் ஏற்படலாம். இதனால் எதிர் விளைவுகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.


நாளொன்றுக்கு இளநீர் எந்த அளவிற்கு குடிக்கலாம்


இளநீர் எவ்வளவு குடிக்கலாம் என்பது குறித்து, நிபுணர்கள் கூறுகையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு இளநீர் குடிக்கலாம் என்கின்றனர். தினமும் குடிப்பவர்கள், இந்த அளவிற்கு மிகாமல் குடிப்பது நல்லது. மேலும், பேக் செய்யப்பட்ட இளநீர் அவ்வளவு நல்லதல்ல. இதில் சேர்க்கை சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதால், உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே பாக்ஸ் செய்யப்பட்ட இளநீரை தவிர்த்து, இயற்கையாக கிடைக்கும் இளநீரை அப்படியே உட்கொள்வது தான் நல்லது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஆண்கள் யோகாசனம் செய்யலாமா? அப்படி செய்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ