சிறு வயதில், எண்ணெய் பொருட்கள், சர்க்கரை தின்பண்டங்கள் என்று சாப்பிட்டு வளர்ந்த நாம், வளர்ந்தவுடன் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவை அனைத்தையும் சாப்பிடுவதை எப்போதோ நிறுத்தியிருப்போம். ஆரோக்கிய நிபுணர்கள் கூறும் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று நினைத்து, இணையத்தில் காண்பிக்கப்படும் ஏதேதோ பழங்களை சாப்பிட ஆரம்பிப்போம். ஆனால், அதில் சில பழங்கள் கூட ஆரோக்கியமற்றவை என கூறப்படுகிறது. அவை என்னென்ன தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரஞ்சு:


இந்த பழத்தை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறும். நல்ல சுவையுடன் இருக்கும் இந்த பழத்தில் உடலில் நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் வைட்டமின் சி சத்துகள் இருக்கின்றன. ஆனால், இதில் சில ஆபத்தான விஷயங்களும் இருக்கின்றன. இதில் இருக்கும் சிட்ரஸ், நம் உடலில் அமிலத்தை அதிகமாக சுரக்க வைக்கும் என கூறப்படுகிறது. இதனால், வயிறு அஜீரண கோளாறு, உணவுக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். இது குறித்து வெளியாகியிருக்கும் ஒரு மருத்துவ ஆய்வறிக்கையிலும் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 


லிச்சி:


லிச்சி பழங்கள், சுவையான மற்றும் இனிப்பான பழங்களுள் ஒன்ராகும். இதில் இருக்கும் சுவையான சாறு, பலருக்கு நாவில் ஒட்டிக்கொள்ளும் சுவையை கொடுக்கும். நல்ல சுவையான இந்த ப்ழத்தில் ஹைப்போக்லிசின் ஏ (Hypoglycin A) எனும் பிரச்சனையும் இருக்கிறது. இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் இருக்கும் ரத்த சர்க்கரை அளவை ஒரே அடியாக குறைத்து விடுமாம். 


இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் ஒரு மருத்துவ ஆய்வில், வெறும் வயிற்றில் லிச்சி பழத்தை சாப்பிட்ட குழந்தைகள் இரத்த சர்க்கரை அளவு குறைந்து பின்னர் வலிப்பு மற்றும் இறப்பிற்கு ஆளானதாக கூறப்பட்டிருக்கிறது. 


பேரிச்சம்பழங்கள்:


என்னது? பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஆபத்தா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இயற்கையான இனிப்பு சுவை நிறைந்த பழங்களில் ஒன்றான இது, உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதில் பொட்டாசியம் மற்றும் மாக்னீசியம் சத்து அதிகமாக இருக்கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் அல்லது சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் ஆபத்தில் முடியலாம் என்பது மருத்துவர்களின் கருத்து. 


தேங்காய்:


இளநீரில் இருக்கும் தேங்காய், அல்லது தேங்காயை வெட்டியவுடன் சாப்பிடுவதால் உடலுக்கு பெரும்பாலும் எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் இதில் அத்தனை மருத்துவ நன்மைகள் நிரம்பியிருக்கின்றன. ஆனால், காய்ந்த தேங்காய் ஒரு கலோரி குண்டு என்றே மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. காய்ந்து போன தேங்காயில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதை தொடர்ந்து நமது உணவில் சேர்த்துக்கொண்டால் இருதய நோய் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. 


இனிப்பு நிறைந்த பழங்கள்;


ஒரு சில பழங்களில், அளவுக்கு அதிகமான இனிப்பு சுவையுடன் இருக்கும் பழங்கள், உடலுக்கு ஆபத்தானவை என கூறப்படுகிறது. எனவே, பதப்படுத்தப்பட்ட பழங்கள், அதிக இனிப்பூட்டப்பட்ட பழங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லதாகும். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ