ஹீமோகுளோபின் ரத்த சிவப்பணுக்கள் அதிகமானால் ஏற்படும் அறிகுறிகளும் நோய்களும்! உஷார்

Risk Of Polycythemia: உடல் ஆரோக்கியத்திற்கு காரணமான ரத்த சிவப்பணுக்கள் குறைந்தால் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படும். ஆனால், இந்த ஹீமோகுளோபின் அளவு அதிகரித்தால் என்ன ஆகும்?

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் அது பாலிசித்தீமியா என்று அழைக்கப்படுகிறது. இது என்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும்? இதன் அறிகுறிகள் என்ன?

1 /8

பாலிசித்தீமியா என்பது நம் உடலில் சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும் ஒரு நிலை. இது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் அசாதாரணங்களின் காரணமாக எலும்பு மஜ்ஜையில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும்

2 /8

அதிகப்படியான ரத்த சிவப்பணுக்கள் இரத்தத்தை தடிமனாக்குகிறது, அதன் ஓட்டத்தை குறைக்கிறது மற்றும் இரத்த உறைவு போன்ற கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

3 /8

ஆண்களுக்கு 16.5g/dL மற்றும் பெண்களுக்கு 16g/dL க்கும் அதிகமான ஹீமோகுளோபின் அளவுகள் அசாதாரணமானதாகக் கருதப்படுகிறது 

4 /8

உயர் HB அறிகுறிகள் அதிக ஹீமோகுளோபின் அளவுகள் வழக்கமான இரத்த பரிசோதனைகளில் கண்டறியப்படலாம் மற்றும் சில நேரங்களில் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது.

5 /8

அடிக்கடி தலைவலி வருவது, பார்வை மங்கலாவது, மூட்டுவலி மற்றும் மூட்டுகளில் வீக்கம் ஆகியவை ரத்த சிவப்பணுக்கள் உடலில் அதிகரித்தால் ஏற்படும் அறிகுறிகள் ஆகும். ஆனால், இவை பிற நோய்களுக்குமான பொதுவான அறிகுறிகள் என்பதால் பாலிசித்தீமியாவை கண்டறிவது கடினம். 

6 /8

ரத்த பரிசோதனையின் மூலம் கண்டறியலாம். ஆண்டுக்கு ஒருமுறை ஹெல்த் செக்கப் செய்வது என்பது இதுபோன்ற அரிதான சிக்கல்களை கண்டறிய உதவும்

7 /8

அதிக ஹீமோகுளோபின் அளவை புறக்கணிக்கக்கூடாது, ஏனெனில் இது இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் சில நேரங்களில் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் கால்கள் மற்றும் வயிற்றில் இரத்தக் கட்டிகள் போன்ற ஆபத்தான நிலைமைகளுக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு அதிக ஹீமோகுளோபின் இருப்பதாக கண்டறியப்பட்டால் ஹீமாட்டாலஜிஸ்ட்டை அணுக வேண்டும்.

8 /8

பாலிசித்தீமியா ஏறப்டுவதற்கான காரணத்தை தீர்மானிக்க எலும்பு மஜ்ஜை பரிசோதனையும் செய்யப்படுகிறது