புதுடெல்லி: மத்திய அரசின் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.  திவாலான வங்கியில் உங்கள் பணம் இருந்தால், அதை  மூன்று மாதங்களுக்குள்  பெறுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவின்படி, ஒரு வங்கி திவால் என அறிவிக்கப்பட்டால், வாடிக்கையாளர் டி.ஐ.சி.ஜி.சி சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்குள் ரூ .5 லட்சம் வரை  திரும்பப் பெற முடியும்.


இதற்காக, வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் சட்டத்தில்  (DICGC Act) மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. கடந்த ஆண்டு, வைப்புத்தொகை மீதான காப்பீட்டுத் தொகையை ரூ .5 லட்சமாக மத்திய அரசாங்கம் உயர்த்தியது.


Also Read | Chief Ministers: தந்தை - மகன் இருவரும் மாநில முதலமைச்சர்களாக இருந்த பட்டியல்


மத்திய அமைச்சரவை முடிவு குறித்து தகவல் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டி.ஐ.சி.ஜி.சி மசோதா 2021 இன் கீழ் 98.3 சதவீத வைப்புத்தொகை வழங்கப்படும் என்று கூறினார். டி.ஐ.சி.ஜி.சி சட்டத்தின் கீழ், அனைத்து வணிக, வெளிநாட்டு, சிறு, கிராமப்புற, கார்ப்பரேட் வங்கிகள் அனைத்துமே, வங்கிகள் வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக சட்ட திருத்த மசோதாவுக்கு (2021) கீழ் வரும் எனத் தெரிவித்தார்.


தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் டி.ஐ.சி.ஜி.சி திருத்த மசோதா  தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் கூறினார். பி.எம்.சி வங்கி, யெஸ் வங்கி மற்றும் லட்சுமி விலாஸ் வங்கி கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கியால் "திவாலான வங்கி" என அறிவிக்கப்பட்ட பிறகு, வைப்புத்தொகையாளர்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெறுவதில் நிறைய சிரமங்களை எதிர்கொண்டனர்.


Also Read | 7th Pay Commission அதிர்ச்சி செய்தி: அடிப்படை சம்பள உயர்வு குறித்த எண்ணம் இல்லை - அரசு


இதைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு மத்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்தது, வைப்புத்தொகை காப்பீட்டின் வரம்பை ரூ .5 லட்சமாக உயர்த்தியது. இதன் பொருள் வங்கி மூழ்கினாலும்,.5 லட்சம் ரூபாய் வரை திரும்ப கிடைக்கும். 


இது தவிர, வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டு மசோதாவின் திருத்தங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவில் முதல்முறையாக ஒரு திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது சிறிய எல்.எல்.பி களின் வரம்பு விரிவுபடுத்தப்படுகிறது.


ரூ .25 லட்சம் அல்லது அதற்கும் குறைவான பங்களிப்பு மற்றும் ரூ .40 லட்சத்திற்கும் குறைவான வருவாய் கொண்ட எல்.எல்.பி.க்கள் சிறிய எல்.எல்.பிகள் ஆகும். இப்போது ரூ .25 லட்சம் வரம்பு கொண்டவை ரூ .5 கோடியாகவும், அவற்றின் விற்றுமுதல் வரம்பு ரூ .50 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 


Aslo Read | ஜம்மு காஷ்மீர் கிஸ்த்வர் மாவட்டத்தில் மேக வெடிப்பு: 4 பேர் பலி, 36 பேரைக் காணவில்லை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR