தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படத்திற்கு எதிரான மனு தொடர்பான வழக்கை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், மனுதாக்கல் செய்தவருக்கு 1 லட்சம் அபராதத்தையும் நீதிபதி விதித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அபராதத் தொகையை மனுதாரர் 6 வாரங்களுக்குள் கேரள சட்ட சேவைகள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக, கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ்கள் கொடுப்பதில் என்ன தவறு என்று கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும், 'பிரதமரை நினைத்து நீங்கள் வெட்கப்படுகிறீர்களா?' என்றும் கேரள உயர் நீதிமன்றம்  மனுதாரரிடம் கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.


ALSO READ | தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு இந்த அடிப்படை வசதிகள் கிடையாது!


தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமரின் படத்தை நீக்கக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன், பிரதமரைப் பற்றி நினைத்து வெட்கப்படுகிறீர்களா? என்று மனுதாரரிடம் கேட்டிருந்தார். மேலும், பிரதமர் (Prime Minister) நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும், சான்றிதழில் அவரது புகைப்படம் இருப்பதில் தவறில்லை என்றும் தெரிவித்திருந்தார்.


அதற்கு பதிலளித்த மனுதாரரின் வழக்கறிஞர், மற்ற நாடுகளில் இதுபோன்ற நடைமுறை இல்லை என சொன்னதை கேட்ட நீதிபதி, “தங்கள் பிரதமர்களைப் பற்றி அவர்கள் பெருமை கொள்ளாமல் இருக்கலாம், ஆனால், நமது பிரதமரைப் பற்றி பெருமைப்படுகிறோம்” என்றும் நீதிபதி தெரிவித்தார். 


இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பேசிய மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவிட் தடுப்பூசி சான்றிதழானது தனிப்பட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பிரத்யேகமான சான்றிதழ்.  தனிநபரின் தனியுரிமைக்குள் ஊடுருவுவது பொருத்தமற்றது என்று கூறினார்.


READ ALSO | கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொதுவெளியில் நடமாட தடை


சான்றிதழில் பிரதமரின் புகைப்படத்தைச் சேர்ப்பது (Prime Minister's photo to the certificate) என்பது, தனிநபரின் அந்தரங்கத்தில் ஊடுருவும் செயல் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.


மேலும், இந்த மனுவில் ஏதேனும் தகுதி உள்ளதா என்பதை ஆராய்வதாகவும், இல்லையென்றால், வழக்கை முடித்துக் கொள்வதாகவும் கடந்த வாரம் நீதிமன்றம் கூறியது. அதன்படி, இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.



பொதுப் பணத்தைப் பயன்படுத்தி விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வகுத்துள்ளதால், இது அரசியல் கருத்து வேறுபாடு அல்ல என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.  சான்றிதழ்களில் புகைப்படம் இருப்பது வாக்காளர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், சமீபத்தில் நடந்த மாநில சட்டசபை தேர்தலின் போது இந்த பிரச்னை எழுப்பப்பட்டதையும் மனுதாரரின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியிருந்தார்.  


இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு (Central government), இது போன்ற மனுக்கள் விளம்பரத்திற்காக செய்யப்படுபவை எதிர்ப்பு தெரிவித்தது. தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பது என்பது, அடிப்படை உரிமைகளை மீறுவது என்று மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


Also Read | 100 கோடி தடுப்பூசி சாதனையும், பிரதமரின் உரையும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR