புதுடெல்லி: பதின்மூன்று வயதில் சரோஜ் கான் 41 வயது மனிதரைத் திருமணம் செய்துக் கொண்டபோது, கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது அவருக்குத் தெரியாது.  நடன மாஸ்டர் பி சோஹன்லால் தனது உதவியாளர் நிர்மலாவின் பெயரை சரோஜ் என்று மாற்றி, கழுத்தில் தாலி கட்டி, இன்று முதல் நான் தான் உன் கணவர் என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்களின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. சரோஜ் கான் மூன்று குழந்தைகளுக்கு தாயானார். ஹமீத், ஹினா மற்றும் சுகைனா என்ற மூன்று குழந்தைகளுடன் கணவரிடமிருந்து பிரிந்துவிட்டார். திரைப்படங்களில் நடனக்குழுவில் ஆடும் ஒரு நடனக் கலைஞராக பணியாற்றி தனது குழந்தைகளை வளர்த்தார்.  


Also Read | டெல்லி, நொய்டா மற்றும் NCR சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நில அதிர்வு 


காதலுக்கு கண்ணில்லை 


சர்தார் ரோஷன் கானை சரோஜ் கான் தனது இருபத்தி ஆறு வயதில் சந்தித்தார். ரோஷனுக்கு சரோஜ் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ரோஷன் கானும் ஏற்கனவே திருமணம் ஆனவர், ஆனால் அந்த விஷயத்தை சரோஜிடம் மறைக்கவில்லை. ரோஷன் கான் சரோஜ் கானை முழு மனதுடன் காதலித்தார்.  ஆனால், ஏற்கனவே திருமணம் ஆனவரி காதலிக்க விருப்பமில்லை என்று சரோஜ் மறுப்பு தெரிவித்தார். ஆனால், ரோஷனின் காதலோ வேதாளம்-முருங்கைமரக் கதையாக இருந்தது. அவ்வப்போது சரோஜின் வீட்டிற்கு பூக்கள் மற்றும் இனிப்புகளை அனுப்பிக் கொண்டே இருப்பார்.


ஒரு நாள் சரோஜை சந்திக்க வந்த ஒரு பெண் சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார். குழந்தைகளை தனியாக எப்படி வளர்ப்பாய் என்று கேள்வி எழுப்பினார்.  மறுமணம் செய்து கொள்ளுமாறு சரோஜுக்கு அறிவுறுத்தினார். அதுமட்டுமல்ல, முழு மனதுடன் காதலிக்கும் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.  


Also Read | China: வெள்ளதால் சீரழியும் சீனாவில் IV நிலை அவசரகால எச்சரிக்கை


அந்த பெண் யார் என்று சரோஜ் கான் தெரிந்துக் கொண்டபோது அவருக்கு திகைப்பு ஏற்பட்டது. ஆம், மனம் விரும்பிக் கேட்பவரை கைவிடாதே என்று சரோஜுக்கு அறிவுரை சொன்னவர் ரோஷன் கானின் மனைவி!


இந்த நிகழ்வு சரோஜின் மனதில் ஓரளவு மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தியது. சரோஜ் ரோஷன் கானை மறுபட்ட கோணத்தில் அதன்பிறகுதான் சரோஜ் பார்க்கத் தொடங்கினார். ரோஷன் மனமார விரும்புவது தன்னை மட்டுமல்ல தனது மூன்று குழந்தைகளையும் தான் என்று புரிந்துக் கொண்டார்.    


இறுதியில் ரோஷன் கானை சரோஜும் விரும்பத் தொடங்கினார். 1975 இல், ரோஷன் கானை திருமணம் செய்து கொண்டு, திருமதி .சரோஜ் கான் ஆனார். காதல் கணவரின் ஊக்கம், சரோஜை தொழிலில் முன்னேற்றியது.


அதனது பல பேட்டிகளில் தனது கணவர் ரோஷனின் அன்பையும், பண்பையும் பற்றி சரோஜ் கூறியிருக்கிறார். 'நான் ரோஷனை சந்திக்காமல் போயிருந்தால் எனது வாழ்க்கை முழுமையடைந்திருக்காது. அவருடன் வாழ்க்கையில் இணைந்தப் பிறகு, நான் ஊக்கத்துடன் எனது வேலையைச் செய்யத் தொடங்கினேன். எனது வாழ்க்கையையும், வேலையையும் ரசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் எனது முன்னேற்றம் தொடங்கியது. அவர் எப்போதும் எனக்கு ஆதரவு கொடுத்து ஊக்குவித்தார்” என்று கணவரை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்வார் சரோஜ் கான்.


Also Read | விளையாட்டு வீராங்கனை கரானோவின் வைரலாகும் topless photos


இதைவிட மற்றுமொரு சுவராஸ்யமான தகவல் என்னத் தெரியுமா? தனது சக்களத்தியான ரோஷன் கானின் முதல் மனைவியுடன் சரோஜ் கானுக்கு இறுதி வரை நட்பு நீடித்தது.


இந்தி திரைப்படத் துறையில் 'Mother of Dance' என்று அழைக்கப்பட்ட மூத்த பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான், 2020 ஜூலை 3ஆம் தேதியன்று அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்தார். நெஞ்சுவலியினால் ஜூன் 20 முதல் குரு நானக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 


மாஸ்டர்ஜி என்று அனைவராலும் அழைக்கப்படும் சரோஜ் கான் தனது 4 தசாப்த கால திரைப்படத்துறையில் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். நடன ரியாலிட்டி ஷோக்களில் நீதிபதியாகவும், பல இளம் நடனக் கலைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர்.