மும்பை: நாளை பாஜக தலைமையிலான அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், தற்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த விவகாரம் அரசியல் வட்டராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா தலைமையில் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிருபிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒருவேளை பெரும்பான்மை நிருப்பிக்கப்பட்டால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி விடும். இந்த கூட்டணி கட்சிகளின் ஒப்பந்தம் படி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக பதவி ஏற்கலாம் எனத்தகவல்கள் வந்துள்ளன. ஆனால் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளியாக வில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேவேலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் துணை முதலமைச்சர் பதவியும், காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


ஏற்கனவே, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசாங்கம் அமைப்பது தொடர்பாக காங்கிரஸ், என்.சி.பி மற்றும் சிவசேனா தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பு முடிந்ததை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இருப்பார் என்ற கொள்கையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என்றார். 


ஆனால் ஆலோசனை கூட்டத்திலிருந்து வெளியே வந்த உத்தவ், முதலமைச்சர் பதவி பற்றி எதுவும் கூற மறுத்துவிட்டார். பெரும்பாலான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. ஆன்ல முதலமைச்சராக பதவி ஏற்பது குறித்து இன்னும் நான் ஒப்புக் கொள்ளவில்லை என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார். 


ஆனால் அதற்கு அடுத்த நாள், மகாராஷ்டிரா அரசியலில் நடந்த வியத்தகு விசியம் என்னவென்றால், ஒரே இரவில் திடிரென பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சி சில எம்.எல்ஏ-க்களுடன் சேர்ந்து கூட்டணியை உருவாக்கியது. அன்று அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து தேவேந்திர ஃபட்னாவிஸ் இரண்டாவது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்றார். ஷரத் பவாரின் மருமகன் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இவர்களுக்கு மாநில ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
 
அடுத்த நாள் சிவசேனா தலைமையில் அட்சி அமைய உள்ளது என நினைத்திருந்த வேளையில், பாஜகவின் திட்டம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. 


பாஜக-வின் செயலுக்கு எதிராக என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டாக மனு தாக்கல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணையை நீதிபதி என்.வி.ரமணா நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. நேற்று இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இறுதி தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்தனர். இந்தநிலையில், இன்று காலை மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. 


அப்பொழுது மஹாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடைபெற வேண்டும். வாக்கெடுப்பில் எந்தவித இரகசியமாக இருக்கக் கூடாது. இந்த நிகழ்சியை நேரலை செய்ய வேண்டும். அனைத்து கட்சிகளும் ஜனநாயக மாண்பை கண்டிப்பாக கடைபிடிக்கவும், காப்பாற்றவும் வேண்டும் என உத்தரவிட்டது.


நாளை பாஜக தலைமையிலான அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், தற்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.


செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ் கூறியாதவது, 


நடந்து முடிந்த தேர்தலில் பாஜக - சிவசேனா பெரும்பான்மையினை நிரூபித்தது. எனினும் சிவசேனா-வின் அதிகாரப்பகிர்வு காரணமாக மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. தேர்தலுக்கு முன்பு சிவசேனாவுடன் முதல்வர் பதவி சுழற்சி குறித்து ஒப்பந்தம் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. சிவசேனா தற்போது பிறிந்து சென்றாலும் மாநிலத்தில் பாஜக தனி பெரும் கட்சியாக தனித்து நிற்கும். எதிர்கட்சியாக அமர்ந்து மக்களின் குரலாக பாஜக இனி செயல்படும் எனக்கூறினார். 


சிவசேனாவின் பதவி பசி அவர்களை காங்கிரஸுடன் கைகோர்க்க வைத்துள்ளது. சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் அமையும் ஆட்சி குறித்து விமர்சித்த பட்னாவிஸ், மூன்று சங்கர வாகனம் நிலைத்து, நீடித்து ஓடாது என குறிப்பிட்டார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.