7th Pay Commission Latest Updates:  மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 17%-லிருந்து 28% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 11% அதிகரிப்பு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நல்ல செய்தியை அளித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் இந்த மகிழ்ச்சியில் ஒரு சிறிய வருத்தமும் உள்ளது. ஏனென்றால் நிலுவைத் தொகை தொடர்பாக அரசாங்கமும் ஒரு அறிவிப்பை வெளியிடும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர் தொகை கிடைக்காது என தெரியவந்துள்ளது.


அதிகரித்த டிஏ ஜூலை 1 முதல் கிடைக்கும்


அகவிலைப்படியை (DearnessAllowance) 28% ஆக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் இந்த முடிவு சுமார் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் சுமார் 48.34 லட்சம் மத்திய ஊழியர்களுக்கும் பயனளிக்கும். கொரோனா தொற்று காரணமாக, 2020 ஜனவரி முதல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி அதிகரிப்பில் மத்திய அரசு தடை விதித்திருந்தது.


முன்னர் ஊழியர்கள் 17% என்ற விகிதத்தில் அகவிலைப்படியை பெற்றுக்கொண்டிருந்தனர். 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை, அகவிலைப்படி 17 சதவீதமாகவே இருக்கும் என்று அரசாங்கம் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்ததால், அதிகரித்த அகவிலைப்படி, அதாவது 28 சதவீத டி.ஏ ஜூலை 2021 முதல் பொருந்தும்.


ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி, 28% டி.ஏ-வுக்கு ஒப்புதல்


அகவிலைப்படி அதிகரித்தது, ஆனால் நிலுவைத் தொகை கிடைக்காது


அரியருக்கான ஊழியர்களின் (Central Government Employees) கோரிக்கையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என  ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அரசாங்கம் இதை மறுத்துவிட்டது. அதிகரித்த அகவிலைப்படி 2021 ஜூலை 1 முதல்தான் பொருந்தும் என்று அரசாங்கம் கூறியது.


அதாவது, கடந்த 18 மாதங்களின் டிஏ அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்காது. இது ஊழியர்களுக்கு சற்று ஏமாற்றமளிக்கும் செய்தியாக உள்ளது. ஏனெனில், நிலுவையில் உள்ள மூன்று டிஏ-வின் தொகையும் கிடைத்தால், அவர்களின் கணக்கில் ஒரு பெரிய தொகை வரும் என்று ஊழியர்கள் காத்திருந்தனர்.


எந்த மாத சம்பளத்தில் அதிகரித்த டி.ஏ. வரும்?


மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 28% டிஏ மற்றும் டிஆர்(Dearness Relief) அதிகரிப்பு ஜூலை 1 முதல் பொருந்தும். ஆனால் அந்த தொகை ஜூலை சம்பளத்தில் வருமா என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது. ஏனென்றால் இன்று அல்லது நாளைக்குள் மத்திய அரசு இது குறித்த உத்தரவை பிறப்பித்தால்தான் இந்த மாத சம்பளத்தில் அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும். 


ஊழியர்களின் சம்பள கணக்கீடு ஒவ்வொரு மாதமும் 16 ஆம் தேதி முதல் செய்யப்படத் தொடங்குகிறது. ஆகையால் இப்போது இது நடக்கவில்லை என்றால், அதிகரித்த டிஏ அதாவது 28% அடுத்த மாத சம்பளத்தில்தான் வரக்கூடும்.


ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் அளித்தது அரசு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR