7வது ஊதியக்கமிஷன் புதுப்பிப்பு: மார்ச் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீட்டின் அதிகரிப்புக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்து பல தகவல்கள் வந்துள்ளன. 2020ஆம் ஆண்டு முதல் கோவிட் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி சில காலத்துக்கு நிறுத்தப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவிட் நிலைமை சற்று சரியானவுடன் இந்த முடக்கம் மீண்டும் நீக்கப்பட்டது. எனினும், முடக்கப்பட்ட காலத்தின் டிஏ பாக்கி தொடர்பாக அரசு விரைவில் முடிவெடுக்கும் என பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.


சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவுகிறது


பல சமயங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுவதுண்டு. மத்திய அரசு ஊழியர்களின் 2020 ஆம் ஆண்டில் முடக்கப்பட்ட அகவிலைப்படி ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது என்றும் கோவிட்-19 நோய்த்தொற்று காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி பணம் தவணை முறையில் வழங்கப்பட்டது என்றும் பல புரளிகள் பரப்பப்பட்டு வருகின்றன.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், முழு கணக்கீடு இதோ 


நிலுவைத் தொகையை அளிக்கும் யோசனை இல்லை


தற்போது மீண்டும் 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்து பரப்பப்படும் செய்தி தவறானது என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த நிலுவைத்தொகை வழங்கப்படாது. நிலுவைத் தொகை வழங்குவது குறித்து எந்த சிந்தனையும் இல்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது நிறுத்தி வைக்கப்பட்ட 3 தவணை அகவிலை நிவாரணப் பாக்கி-யை உடனடி நிவாரணப் பணிகளுக்காக விடுவிக்க ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளது.


டிஏ பாக்கி தவணை கிடைக்காது


ஒரு மதிப்பீட்டின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதார்ரகளுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் நிலுவைத் தொகை சுமார் 34,000 கோடிகளாகும். ஓய்வூதிய விதிகளை மறுஆய்வு செய்ய தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழு கூட்டத்தில், டிஏ மற்றும் டிஆர் நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று செலவினத் துறை (டிஓஐ) தெளிவுபடுத்தியது.


அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது


ஜூலை 1, 2021 முதல், அகவிலைப்படி மீதான தடை நீக்கப்பட்டதிலிருந்து, அரசாங்கத்தால் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2021 முதல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக 17 சதவீதத்தில் ஊழியர்கள் அகவிலைப்படியை பெற்று வந்தனர். 2021 அக்டோபரில் 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டு அகவிலைப்படி சதவீதமாக அதிகரித்தது. மார்ச் 2022 இல், அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. தற்போது அகவிலைப்படி 34 சதவீதமாக உள்ளது. இதைத் தொடர்ந்து ஜூலையில் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, HBA விகிதங்களை குறைத்தது அரசு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR