இந்தியாவில் பெரும்பாலும் காலை உணவுகளில் பூரி, பொங்கல், இட்லி, தோசை அல்லது உப்மா போன்றவை செய்யப்படும். இதனுடன் சிலர் பால், சட்னி அல்லது குழம்பை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், காலை உணவில் எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டுமானால் காலை உணவில், உப்மா, காரம் கலந்த கஞ்சி, நெய் தடவிய ரொட்டி போன்றவற்றைச் சேர்த்துக் கொண்டால் அது அதிக பலன் தரும். ஆனால் நாம் காலை உணவில் எதைச் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எடை இழப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை... கொழுப்பை எரிக்கும் ஆற்றல் பெற்ற கொள்ளு!


சிட்ரஸ் பழங்கள்


பெரும்பாலான மக்கள் காலை உணவாக பழங்களை சாப்பிடுவார்கள், ஆனால் சில பழங்களை காலையில் சாப்பிடுவது நல்லதல்ல. அதிலும் சிட்ரஸ் பழங்கள் காலியில் சாப்பிடக்கூடாது. இது அமில தன்மை கொண்டது, இது வாயு பிரச்சனையை அதிகரிக்கிறது. சிட்ரஸ் பழங்கள் அனாபிலாக்ஸிஸை (ஒவ்வாமை) ஏற்படுத்துகின்றன, இது பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சிட்ரஸ் பழச்சாறுகளில் உள்ள சிட்ரிக் அமிலம் தோல், வாய் மற்றும் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.


தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்


காலை உணவாக தயிர் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆயுர்வேதத்தின் படி, தயிர் உட்கொள்வது உடலில் சளி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கிறது. வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவதால் சளி பிரச்சனைகள் ஏற்படும். இதில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் பி12 ஏராளமாக உள்ளது, தயிர் மதிய வேளையில் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.


பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால்


பதப்படுத்தப்பட்ட உணவு என்றால் மாவு ரொட்டி, கொழுப்பு இல்லாத பால், வறுத்த பருப்பு விதைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள். தினசரி காலை உணவில் இவற்றைப் பயன்படுத்துவதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கிறது. அவற்றில் அதிக அளவு சர்க்கரை உள்ளது மற்றும் பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் உள்ளது. தனியாக வாழும் மக்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவைப் பயன்படுத்துகிறார்கள், இதனால் அவர்கள் விரைவில் நோய்வாய்ப்படுகிறார்கள்.


வெள்ளை ரொட்டி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்


பிரட் பெரும்பாலும் காலை உணவில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் பிரட்டில் அமிலோபெக்டின் ஏ உள்ளது, இது சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதை தினமும் சாப்பிட்டால் சர்க்கரை நோய், சிறுநீரகக் கற்கள், இதய நோய் போன்றவையும் ஏற்படும். இதை சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.


வாழைப்பழம்


வாழைப்பழம் உடலுக்கு நல்லது என்பதால் காலையில் சில இதனை சாப்பிடுகின்றனர்.  வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது இரத்தத்தில் மெக்னீசியத்தின் அளவை அதிகரிக்கிறது, இது உங்கள் இதயத்திற்கு நல்லது இல்லை. வாழைப்பழங்களில் இயற்கையான சர்க்கரையும் அதிகமாக உள்ளது, சராசரியாக வாழைப்பழத்தில் 25% சர்க்கரையாக இருப்பதால், உங்களுக்கு ஆரம்ப ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது, ஆனால் பிற்காலத்தில் ஆபத்தாக முடியும். 


மேலும் படிக்க | பருமன் எக்கசக்கமா இருக்கா... உடல் கொழுப்பை எரிக்கும் ‘சில’ சிறுதானியங்கள்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ