ஜோதிடத்தில், எதிர்காலம் பற்றி அறிய பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. ராசியின் அடிப்படையில் ஒருவரின் இயல்பு மற்றும் எதிர்காலத்தை அறிவது இந்த வழிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு நபரின் ராசியும் அவர் பிறந்த நேரத்தைப் பொறுத்து மனிதர்களின் இயல்பை அறியலாம். ஒவ்வொரு நபரின் ராசியும் வேறுபட்டது. அதன் அடிப்படையில் அவரது இயல்பு, விருப்பு வெறுப்பு போன்றவையும் வேறுபட்டதாக இருக்கும். அந்த வகையில், வெற்றி பெற என்ற பேரார்வம் கொண்டர்வகளாகவும் கருதப்படும், 4 ராசிக்கார பெண்களைப் பற்றி இன்று நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களின் இந்த ஆர்வம் அவர்களை வாழ்க்கையில் உச்சத்தை அடைய பெரிதும் உதவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிதுனம்:


ஜோதிட சாஸ்திரத்தின் படி, மிதுன ராசி பெண்கள் மூளை கூர்மையானவர்களாக இருப்பார்கள். இயற்கையில் பிடிவாதமும் ஆர்வமும் உள்ளவர்கள். கடின உழைப்பின் அடிப்படையில், ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் தோற்கவே விரும்ப மாட்டார்கள். அதனால் தான் வெற்றிக்காக இரவும் பகலும் உழைக்கிறார்கள். அவர்களின் உறுதியான குணத்தாலும் ஆர்வத்தினாலும் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். அவர்கள் பலருடன் ஆலோசித்து முன்கூட்டியே திட்டமிட்டு, பணிகளை செய்கிறார்கள்.


மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 


கன்னி:


ஞானக் கடவுளான புதனால் ஆசி பெற்றவர்கள். இந்த காரணத்தினால், அவர்களின் அறிவார்ந்த திறனின் வலிமையால், அவர்கள் வாழ்க்கையில் எதையும் சாதிக்கிறார்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகம் இருக்கும். மிகுந்த ஆர்வம் மற்றும் ஈடுபாட்டின் காரணமாக, அவர்களை மற்றவர்களிடமிருந்து தனித்து சிறப்பாக தெரிகிறார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு சவாலையும் சவாலாக எடுத்துக்கொண்டு தைரியமாக எதிர்கொள்கிறார். தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், உறுதியாக வெற்றி பாதையை நோக்கி செல்வார்கள். அதனால், மிக இளம் வயதிலேயே வெற்றியின் உச்சத்தை அடைகிறார்கள்.


மகரம்:


ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்தப் பெண்களும் புத்திசாலித்தனமானவர்கள். அவர்களின் உறுதியான குணம் அவர்களை அவர்களின் தொழிலில் முன்னோக்கி கொண்டு செல்கிறது. வெற்றி பெற வேண்டும் என்ற ஆவல் அவர்களை தூங்க விடாது. அதை அடைய கடினமாக உழைக்கிறார்கள். இந்த பெண்கள் தங்கள் இலக்கை அடையும் வரை முயற்சியை கை விடுவதில்லை. வெற்றி ஒன்றையே தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் தன்மை கொண்டவர்கள்.


கும்பம்:


இந்த ராசிப் பெண்களுக்கு சனியின் பாக்கியம் உண்டு. அவர்கள் மிகவும் அமைதியாக, அதே சமயம் உறுதியாக செயல்படும் திறன் கொண்டர்வர்கள். மற்றவர்களை புரிந்துகொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அமைதியாக தன் வேலையைச் செய்கிறார்கள். விடாமுயற்சியும் ஆர்வமும் வெற்றியை அடைய பெரிதும் உதவுகின்றன. இவர்களுக்கு தோல்வி என்பதே பிடிக்காது. அதனால் தான் வெற்றிக்காக இரவும் பகலும், உண்ணாமல் உறங்காமல் உழைக்கிறார்கள். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ