7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஜனவரி மாதம் முதல் அதிகரித்த அகவிலைப்படிக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளிவந்தது. தற்போது, மத்திய அரசு மீண்டும் அகவிலைப்படியை உயர்த்தும் முடிவில் உள்ளது. இது ஊழியர்களிடையே அதிக ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 1 முதல் அகவிலைப்படியில் 3 முதல் 4 சதவீதம் வரை உயர்வு இருக்கும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏழாவது ஊதியக் குழுவின் படி ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் முறையே ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்ற விதி உள்ளது. இருப்பினும், அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.


சுவாரஸ்யமாக, அரசாங்கம் அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டியதில் இருந்து தொடர்ந்து இதை 4 சதவீதம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மூன்று அதிகரிப்புடன், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் தற்போது 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. இப்போது, அது மேலும் 4 சதவீதம் உயரக்கூடும் என ஊகிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜாக்பார்ட் செய்தி! அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு!


தொழிலாளர் அமைச்சகத்தின் கிளையான தொழிலாளர் பணியகத்தால் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் CPI-IW குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படியை மத்திய அரசு கணக்கிடுகிறது. இதைப் பொறுத்தே டிஏ அதிகரிக்குமா இல்லையா என்பது முடிவு செய்யப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில், பிப்ரவரி மாதத்தில் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) புள்ளிவிவரங்களில் சரிவு ஏற்பட்டது. ஆனால் மார்ச் மாதத்தில் இது மேல்நோக்கிய போக்கைக் காட்டுகிறது. இந்த போக்கு விரைவில் டிஏ அதிகரிக்கலாம் என்ற ஊகத்தை தூண்டியுள்ளது. பொருளாதார நிச்சயமற்ற தன்மையால், டிஏவைக் கணக்கிட புதிய சூத்திரமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


அரசு அகவிலைப்படியை உயர்த்தினால், ஊழியர்களின் ஊதியத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும். மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 42 சதவீத அகவிலைப்படியை பெறுகின்றனர். தற்போது ஜூலை மாதம் முதல் இது 3 அல்லது 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 45 அல்லது 46 சதவிகிதமாக அதிகரிக்கும். 


ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? 


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஜனவரி-பிப்ரவரிக்குப் பிறகு, இப்போது தொழிலாளர் அமைச்சகம் மார்ச் மாதத்திற்கான புள்ளிவிவரங்களை ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி ஏஐசிபிஐ மதிப்பீட்டு எண் 132.7 லிருந்து 133.3 ஆக உயர்ந்துள்ளது. 


இந்த எண் அதிகரித்துள்ளதால், அகவிலைப்படியும் 4 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  அதாவது தற்போதைய 42 சதவீதத்திலிருந்து ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். எனினும், ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 வரையிலான புள்ளிவிவரங்கள் இனி வரவுள்ளன. அவை வந்த பிறாகே ஜூலை முதல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது பற்றிய முழுமையான தெளிவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால் இதன் மூலம் 48 லட்சம் ஊழியர்களும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்பபடி  (42 x 29200) / 100 என்ற சூத்திரத்தின் மூலம் தீர்மானிக்கப்படும். அதேபோல், ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணமும் கணக்கிடப்படுகிறது.


மேலும் படிக்க | 8th Pay Commission அட்டகாசமான செய்தி: ஊழியர்களின் ஊதியம் 44% உயரும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ