7 ஆவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: உங்கள் கணவன் அல்லது மனைவி அரசாங்க ஊழியராக இருந்தால், நீங்கள்தான் இப்போது மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. ஆம்!! உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்கப்போகின்றது. இந்தியாவில் பல இடங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் பண மழையையும் அனுபவிக்க உள்ளனர். இந்த மழைக்காலத்தில் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு லாட்டரி அடிக்கப்போகிறது. இது குறித்த சர்ச்சை அனைத்து இடங்களிலும் உள்ளது. அனைவரின் மனதையும் வெல்லும் அளவுக்கு மத்திய ஊழியர்களுக்கு ஒன்றல்ல இரண்டல்ல பெரிய பரிசுகளை வழங்க அரசு ஆயத்தமாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன், மத்திய அரசு அகவிலைப்படி நிலுவைத் தொகையையும் அவர்களது கணக்கில் வரவு வைக்கும். இது ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாக இருக்கும். 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் இந்த முடிவை அரசு விரைவில் எடுக்கும் என்று கூறப்படுகிறது. அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக இதற்கான அறிவிப்பின் தேதியை அறிவிக்கவில்லை. ஆனால் ஆகஸ்ட் 15 க்கு முன் இது வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


டிஏ அரியர் பணம் கணக்கில் வரும்


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் 18 மாத அகவிலைப்படி அரியர் தொகையை மத்திய அரசு வரவு வைக்கக்கூடும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தத் தொகை குறித்து அரசு முக்கிய முடிவு எடுக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது நடந்தால், மத்திய ஊழியர்களுக்கு இந்த ஆண்டு வரப்பிரசாதமாக அமையும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் பற்றிய முக்கிய முடிவு..விரைவில் அறிவிப்பு, ஊழியர்கள் ஹேப்பி


முன்னதாக கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில், அப்போது உருவான அசாதாரண நிலையை சமாளிக்க மோடி அரசாங்கம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை முடக்கியது. இந்தத் தொகை 1 ஜனவரி 2020 முதல் 30 ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு, மத்திய ஊழியர்கள் தொடர்ந்து, கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அரியர் தொகை திரும்ப அளிக்கப்பட வேண்டும் என கோரி வருகிறார்கள். எனினும், இது குறித்து அரசு இறுதியான தெளிவான முடிவு எதையும் எடுக்கவில்லை. ஆனால், இப்போது மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, ஊழியர்களின் காத்திருப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கலாம் என ஆலோசிக்கப்படுகிறது.


டிஏ எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் விரைவில் அதிகரிக்கவுள்ளது. அரசாங்கம் அகவிலைபப்டியை சுமார் 4 சதவிகிதம் அதிகரிக்கப் போகிறது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வரக்கூடும். இது நடந்தால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும். இதன் காரணமாக அடிப்படை சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். தற்போது ஊழியர்களுக்கு 42 சதவீத டிஏ கிடைத்து வருகிறது. 


ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகள் 


மே 2023 இன் ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின்படி, அகவிலைப்படி 45.58 சதவீதத்தை எட்டியுள்ளது. குறியீடு 134.7 புள்ளிகளில் உள்ளது. இதில் 0.50 புள்ளிகள் உயர்வு காணப்பட்டது. ஆனால், ஜூன் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. ஜூன் மாதத்தில் குறியீட்டு எண் அதிகரிக்காவிட்டாலும் அல்லது குறியீட்டில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டாலும் கூட, ஜூலை 2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 46 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். அகவிலைப்படியானது மொத்த எண்ணிக்கையில் (ரவுண்ட் ஃபிகர்) செலுத்தப்படுகிறது. குறியீட்டு எண் 45.50 ஆக இருந்திருந்தால், அகவிலைப்படி 45 சதவீதம் அதிகரித்திருக்கும். ஆனால், மே மாதத்திலேயே குறியீடு 45.58 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆகையால் அகவிலைப்படி குறைந்தது 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 8th Pay Commission: சம்பளத்தில் பெரிய ஏற்றம்.. ஊழியர்கள் காத்திருக்கும் ‘அந்த’ அறிவிப்பு விரைவில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ