பிஎஃப் புதிய விதிகள்: மாத சம்பளத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. நீங்களும் ஒரு பணியாளராக இருந்தால், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஃப்ஓ-வில் கண்டிப்பாக கணக்கு வைத்திருப்பீர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது பிஎஃப் கணக்கிற்கும் வரி விதிக்கப்படும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வெண்டும். உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால் இப்போது பி.எஃப் விதிகளில் சில புதிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. ஏப்ரல் 1, 2022 முதல், தற்போதுள்ள பிஎஃப் கணக்குகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பிஎஃப் கணக்குகளுக்கு வரி விதிக்கப்படும்


கடந்த ஆண்டு புதிய வருமான வரி விதிகளை அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இதன் கீழ் பிஎஃப் கணக்குகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். இதில், மையத்திற்கு ஆண்டுதோறும் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பணியாளர்கள் பங்களிப்பு இருக்கும் நிலையில், பிஎஃப் வருமானத்துக்கு வரி விதிக்கப்படும். புதிய விதிகளின் நோக்கம், அதிக வருமானம் உள்ளவர்கள் அரசின் நலத்திட்டத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதாகும்.


மேலும் படிக்க | EPFO சூப்பர் செய்தி: இந்த முக்கிய வசதி இனி கிடைக்கும், உறுப்பினர்களுக்கு பெரிய நிவாரணம் 


புதிய பிஎஃப் விதிகளின் முக்கிய அம்சங்கள்: 


-  தற்போதுள்ள பிஎஃப் கணக்குகள் வரி விதிக்கக்கூடிய மற்றும் வரி விதிக்கப்படாத பங்களிப்பு கணக்குகளாக பிரிக்கப்படும்.


- வரி விதிக்கப்படாத கணக்குகளில் அவற்றின் குளோசிங் கணக்குகளும் இருக்கும். ஏனெனில் இவற்றின் தேதி மார்ச் 31, 2021 ஆக இருக்கும். 


- புதிய பிஎஃப் விதிகள் அடுத்த நிதியாண்டிலிருந்து அதாவது ஏப்ரல் 1, 2022 முதல் அமல்படுத்தப்படும்.


- ஆண்டுக்கு ₹ 2.5 லட்சத்திற்கு மேல் ஊழியர் பங்களிப்பிலிருந்து பிஎஃப் வருமானத்திற்கு புதிய வரியை அறிமுகப்படுத்த ஐடி விதிகளின் கீழ் ஒரு புதிய பிரிவு 9D சேர்க்கப்பட்டுள்ளது.


- தற்போதுள்ள பிஎஃப் கணக்கில் வரி விதிக்கக்கூடிய வட்டியைக் கணக்கிடுவதற்கு இரண்டு தனித்தனி கணக்குகள் உருவாக்கப்படும்.


இவர்களுக்கு எந்த வித்தியாசமும் இருக்காது


இந்தப் புதிய விதி அமலுக்கு வந்த பிறகு, பெரும்பாலான பிஎஃப் சந்தாதாரர்கள் ரூ. 2.5 லட்சத்தின் வரம்பினால் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் புதிய விதியால் சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோர் பாதிக்கப்பட மாட்டார்கள். இது முதன்மையாக அதிக வருமானம் பெறும் ஊழியர்களை பாதிக்கும். அதாவது, உங்கள் சம்பளம் குறைவாகவோ அல்லது சராசரியாகவோ இருந்தால், இந்த புதிய விதியால் உங்களுக்கு பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது. 


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு பரிசு! புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர அரசு முடிவு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR