EPFO அளிக்கும் அசத்தல் வாய்ப்பு: இதில் பதிவு செய்தால் லாபம் காணலாம்

ABRY திட்டத்தின் கீழ், அரசு, ஊழியர் மற்றும் முதலாளி / நிறுவனத்தின் பங்கை வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்) 2 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 13, 2022, 02:21 PM IST
  • வேலை தேடும் இளைஞர்களுக்கான செய்தி.
  • EPFO வேலை வாய்ப்பை வழங்குகிறது.
  • 72 லட்சம் பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
EPFO அளிக்கும் அசத்தல் வாய்ப்பு: இதில் பதிவு செய்தால் லாபம் காணலாம் title=

நீங்களும் வேலை தேடும் நபர்களில் ஒருவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ இளைஞர்களுக்கு, தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா- ABRY) எளிதாக வேலை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இபிஎஃப்ஓ, 'வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் ABRY-ன் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். அதன் கடைசி தேதி இப்போது மார்ச் 31, 2022 ஆகும். இதன் மூலம் ஒரு நிறுவனத்தில் பணியமர்த்தப்படும் ஊழியர்களின் பிஎப் தொகையை அரசே செலுத்தும். இதுமட்டுமின்றி, நிறுவனத்தின் சார்பில் பி.எஃப்.க்கு செல்லும் தொகையையும் அரசே செலுத்தும்.

இந்த திட்டத்தின் விவரம் என்ன? 

ABRY திட்டத்தின் கீழ், அரசு, ஊழியர் மற்றும் முதலாளி / நிறுவனத்தின் பங்கை வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்) 2 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யும். இது நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான வேலைகளை வழங்க ஊக்குவிக்கும். வேலை கிடைத்த 24 மாதங்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஊழியர்களின் சம்பளத்தில் 24 சதவீதத்தை அரசு பங்களிக்கும். அதாவது, 12 சதவீதம் பணியாளருடையது, 12 சதவீதம் நிறுவனத்தினுடையது.  

மேலும் படிக்க | PF Account: எளிய வழியில் உங்கள் புதிய வங்கிக் கணக்கை பிஎஃப் கணக்குடன் சேர்க்கலாம் 

இந்த திட்டத்தின் பலன் யாருக்கு கிடைக்கும்
- மாதம் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாக சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஏபிஆர்ஒய் திட்டத்தின் பலன் வழங்கப்படும்.

- ஊழியரின் மாத சம்பளம் 15 ஆயிரத்தைத் தாண்டினால், அவரது பிஎஃப் கணக்கில் அரசு செலுத்தும் தொகை நிறுத்தப்படும்.

- இது தவிர, 1,000 பேருக்கு மேல் பணியாளர்கள் இருக்கும் நிறுவனத்திற்கும், திட்டத்தின் பலன் வழங்கப்படாது.

72 லட்சம் பணியாளர்கள் பயன்பெறுவார்கள்

இது குறித்து தகவல் அளித்துள்ள பணியாளர் அமைச்சகம், இந்த திட்டத்தின் மூலம் சுமார் 71.8 லட்சம் புதிய ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மார்ச் 31, 2022க்குள் இபிஃப்ஓ-வில் பதிவு செய்யும் ஊழியர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அரசாங்கத்தால் பி.எஃப் பங்களிப்பின் பலன் வழங்கப்படும். அக்டோபர், 2020க்கு முன் இபிஃப்ஓ-​​இல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.

மேலும் படிக்க | PF New Rules: ஏப்ரல் 1 முதல், PF கணக்கில் பெரிய மாற்றம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News