புதுடெல்லி: இன்னும் சில நாட்களில் ஏற்படவிருக்கும் சனி பெயர்ச்சி பலருக்கும் பலவிதமான பலன்களை கொடுக்கவிருக்கிறது. சில ராசிகளுக்கு அர்தாஷ்டம சனி தொடங்குகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனிப்பெயர்ச்சியில், அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன அதனால் எதுபோன்ற பலன்கள் ஏற்படும், எந்த இடத்தில் சனி பகவான் சஞ்சரித்தால் அது அர்த்தாஷ்டமம் என்று அழைக்கபப்டும்?


அர்த்தாஷ்டம சனியால் எதுபோன்ற விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்துக் கொள்வோம்.


ஜோதிட சாஸ்திரத்தின்படி, அர்த்தாஷ்டம சனியில் பொதுவாக பொருள் மற்றும் நிதி செலவுகள் அதிகரிக்கும். அதாவது அர்த்தாஷ்டம சனி பகவானின் பார்வையில் வந்த ராசியினரின் குடும்பத்தில் திடீர் உடல் நல பாதிப்புகள் ஏற்படுத்தி மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் விரயமாகும். 


மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் பம்பர் பரிசு 


அடுத்து, தேவையற்ற வம்புக்கு சென்று, வாய் வார்த்தைகளை விட்டு, அதில் மாட்டிக் கொள்ளும் நிலையையும் அர்த்தாஷ்டம சனி ஏற்படுத்தும். இதனால், தன்னுடைய நிலையை தானே கெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவாகும். 


வாய்ப்புகள் வளங்கள் வந்தாலும், புதிய தொழில் முயற்சிகள், வியாபாரம் உள்ளிட்டவை நன்றாக நடந்தாலும், செலவுகளும் அதிகரித்து பெரிய பலனைத் தராது. 
எனவே, வரவிருக்கும் இந்த சனிப் பெயர்ச்சியில் அர்த்தாஷ்ட சனியால் பாதிக்கப்படும் ராசி எது தெரியுமா?  


விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 29 முதல் அர்த்தாஷ்டம சனி ஏற்படப்போகிறது.  


மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்கு பின் ராசி மாறும் சனி பகவான்; இந்த ராசிகளுக்கு கவனம் தேவை


29 ஏப்ரல் 2022 அன்று சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாகிறார்.  2022 ஜூன் ஐந்தாம் தேதியன்று சனி பகவான் வக்ர பெயர்ச்சியாக கும்பத்தில் இருப்பார்.


2022 ஜூலை 12ம் நாளன்று சனி பகவான் கும்பத்திலிருந்து வக்ர பெயர்ச்சியாக மகரத்தை அடைவார்.23 அக்டோபர் 2022 அன்று சனி மகரத்தில் மீண்டும் நேர்கதியாக பெயர்ச்சி அடைவார்.


சனியின் பார்வை தொழில் ஸ்தனத்திலும் விழுவதால், வியாபாரம் தொழில் மற்றும் பணியிடத்தில் மிக கவனமாக இருப்பது அவசியம். 


மேலும் படிக்க | பண விஷயத்தில் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்: சனி, செவ்வாயின் அருளால் செல்வம் கொழிக்கும் 


சோம்பலை தள்ளிவிடவும். இல்லாவிட்டால் பணியை சரியாக முடிக்க முடியாத நிலைமை உருவாகும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. வேலையை சரியான நேரத்தில் முடிப்பது பிரச்சனைகளை தவிர்க்க உதவும். 


திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்க வேண்டும் என்றால் குடும்பத்தினரை அனுசரித்து நடக்கவும்.  


அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்படவிருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள்  சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவதும். அனுமனை வழிபடுவதும், உஙக்ள் செயலுக்கு பல மடங்கு பலனைத் தரும்.


ஏழை பிள்ளைகளின் கல்விக்கு உதவி செய்வதும், ஏழை பெண்களின் திருமணத்திற்கு பொருளாதார உதவி செய்வதும் நல்லது.


மேலும் படிக்க | செவ்வாயின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி பொங்கும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR