இந்த 4 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் பம்பர் பரிசு

சனி மற்றும் செவ்வாயின் அருளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 7, 2022, 06:02 AM IST
  • எப்போதும் பணமழை கொட்டும் 4 ராசிகள்
  • செவ்வாயின் ஆதிக்கம் கொண்டவர் அதிர்ஷ்டஷாலிகள்
  • தைரியமாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பார்கள்
  • சனி பகவனானின் ஆதிக்கம் கொண்டவர்களுக்கு புகழ் நிலைத்திருக்கும்
இந்த 4 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் பம்பர் பரிசு title=

ஒருவருக்கு இளம் வயதில் முதல் முயற்சியிலேயே கிடைக்கும் வெற்றி, பலருக்கு பல முயற்சிகளுக்குப் பிறகு கிடைக்கும், சிலருக்கு கிடைக்காமல் கூட போகலாம். அதற்கு காரணம் அவரவர் ராசிகளின் அடிப்படையில் அமைந்திருக்கும் கிரகங்களின் அமைப்பு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஜோதிடத்தின்படி இந்த 4 ராசிக்காரர்கள் மட்டும் இளம் வயதில் இருந்தே செல்வத்தையும், புகழையும் கொண்டிருப்பார்களாம். 

மேஷம்

அதிர்ஷ்டம் நிறைந்த மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் சிறப்பு பார்வை எப்போதும் உள்ளது. செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இவர்கள், தாங்கள் பணிபுரியும் துறையில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். இவர்கள் ஒருமுறை செய்ய முடிவெடுத்த வேலையை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். அவ்வாறு முமுமூச்சாக வேலை செய்யும் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவும் இருக்கும்.

மேலும் படிக்க | இந்த ராசிகளுக்கு இன்று வேலை, வாழ்க்கை, குடும்பம் அனைத்திலும் அதிர்ஷ்ட மழை

விருச்சிகம்

ஆட்சி அதிபதியான செவ்வாயைக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள், பயமற்றவர்களாகவும், தைரியசாலிகளாகவும் இருப்பார்கள். இதனால், வாழ்க்கையில் எதை பெற வேண்டும் என நினைக்கிறார்களோ, அதற்காக கடினமாக உழைக்கிறார்கள். இவர்களின் வெற்றிக்கு இதுவே காரணம். பணத்தை வர வைப்பதிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள்

மகரம்

ஆட்சி அதிபதியாக சனி பகவான் இருக்கும் மகர ராசிக்காரர்கள், மிகவும் கடின உழைப்பாளிகள். அச்சமற்றவர்கள், தைரியசாலிகள். அதே நேரத்தில், அவர்கள் நேர்மையாகவும், பொறுமையாகவும் இருப்பார்கள். கடினமாக உழைக்கும் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் துணையும் கிடைக்கும். அவர்கள் வேலை செய்யும் துறையில் நிறைய வெற்றிகளைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் மீது சனி பகவானின் சிறப்பு பார்வை உண்டு. சனிபகவானின் அருளால், இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுகிறார்கள். இந்த ராசியை சேர்ந்த பெரும்பாலானோரின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News