ஆணோ, பெண்ணோ..யாராக இருந்தாலும் திருமணம் ஆகிவிட்டால் சில விஷயங்களை செய்யவே கூடாது. அப்படி செய்தால் ஒன்று, அந்த உறவுக்குள் சிக்கல் வரலாம், அல்லது அந்த உறவே எங்காவது சென்று பெரிய சிக்கலில் நம்மை மாட்டி விடலாம். எனவே, திருமணமான ஆண்கள் என்னென்ன செய்ய கூடாது என்பது குறித்து இங்கு பார்க்கலாமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் பார்ட்னருக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பது:


உங்களை நம்பி வந்த வாழ்க்கை துணைக்கு, காலம் முழுவதும் மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டியது உங்களது கடமையாகும். அவரை பிடித்தாலும், பிடிக்காமல் இருந்தாலும் அவரை ஒரு சக மனிதராக நீங்கள் மதிக்க வேண்டும். ஒரு சில ஆண்கள், திருமணமான புதிதில் தங்களின் மனைவியை அப்படி விழுந்து விழுந்து பார்த்துக்கொள்வர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அந்த மரியாதை தேய்ந்து, பிரச்சனைகள் உருவாகலாம். 


திருமணத்திற்கு மீறிய உணர்வு: 


திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபடுவது, உங்கள் பார்ட்னருக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் ஆகும். இது, உங்களது உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தி விடும். ஒரு திருமண உறவில் வலுவாக இருக்க வேண்டியது காதல் என்பதை தாண்டி நம்பிக்கையும் புரிதலும்தான். ஆனால் அவை இரண்டிலுமே ஒருவர் திருமணத்திற்கு மீறிய  உறவில் ஈடுபட்டால் கெட்டுப்போய் விடும். 


புறக்கணித்தல்:


எந்த உறவிலும், தெளிவாகவும் மனம் திறந்தும் பேசுவது மிகவும் நல்லதாகும். அப்போதுதான் அந்த உறவு வலுவடையும். சண்டைக்கு பின்பு, எதையும் பேசாமல் அப்படியே விட்டுவிடுவதால் எந்த பிரச்சனையும் சரியாகாது. .இது, தவறான புரிதல்களுக்கும், பின்னாளில் பெரிய பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கலாம்.


சாதாரணமாக எடுத்துக்கொள்வது:


ஒரு உறவு நெடுந்தூரம் பயணிக்க, சம்பந்தப்பட்ட இருவருமே பெரிதளவில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். உங்கள் பார்ட்னர் அந்த உறவை காப்பாற்ற எவ்வளவு முயற்சி செய்கிறார் என்பதை உணர்ந்து அதை அங்கீகரித்து பாராட்ட வேண்டும். அவர் செய்யும் விஷயங்களை குறைத்து மதிப்பிடாமல் இருக்க வேண்டும். 


பண ரீதியான விஷயங்களை மறைக்க கூடாது:


திருமண உறவை பொறுத்த வரை, கடன் பிரச்சனை, நிதியை எங்கு, எதற்காக செலவழிக்கிறோம் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். இதுவும், நம்பிக்கைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான செயல்களுக்கு இது வழிவகுக்கலாம்.


உணர்ச்சி ரீதியான தேவைகள்:


உங்கள் பார்ட்னருக்கு உடல் அளவில் மட்டுமன்றி, உணர்ச்சி ரீதியான தேவைகளும் அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் அவருக்கு அந்த விஷயங்களில் துணையாக இருந்து, அவரது உணர்வு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். 


மேலும் படிக்க | மனதையும் உடலையும் இரும்பு போல ஸ்ட்ராங்கா ஆக்க..தினமும் காலையில் ‘இதை’ பண்ணுங்க!


கருத்துகளை மதிக்காமல் இருத்தல்:


பல ஆண்மகன்கள், தங்களின் மனைவி எது கூறினாலும் அது என்னவோ பெரிய விஷயம் இல்லை என்பது போல அப்படியே அவர்களின் கருத்துகளை புறக்கணித்து விடுவர். இதனால், அவர்கள் மதிப்பை இழப்பது போலவும், தனக்கு தகுதியற்றது போலவும் உணருவர். 


தீங்கு விளைவிக்கும் நடத்தைகளில் ஈடுபடுதல்: 


படிப்பறிவில்லாத-படித்தும் அறிவில்லாத ஆண்கள் பலர் தங்களுக்கென்று ஒரு மனைவி வந்துவிட்டால் அவளை ஒரு பொம்மையாக நினைத்துக்கொண்டு கோபம் வரும்போதெல்லாம் அடித்து துன்புறுத்துவர். அதற்கு சாக்காக குடிப்பழக்கமும், சின்ன வயதில் ஏற்பட்ட ஆறாத மன தழும்பையும் (Childhood Trauma) கூறுவர். இது, திருமண உறவை கெடுப்பதுடன் ஜெயிலிலும் தள்ளி விடும். 


மேலும் படிக்க | கணவருக்கு உங்கள் மீது அதிக காதல் இருந்தால் ‘இங்கு’ முத்தம் கொடுப்பாராம்! எங்கு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ